Type Here to Get Search Results !

கொரோனா பரவல் சென்னையின் நிலை என்ன?

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
கொரோனா பரவல் - சென்னையின் நிலை என்ன?

சென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 63.28% பேரும், பெண்கள் 36.64% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் கொரோனா தொற்றால் ஐந்து மண்டலங்களில் 100 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

சென்னையில் ராயபுரம், திரு,.வி,க.நகர், தேனாம்பேட்டையைத் தொடர்ந்து, தற்போது தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 100-ஐக் கடந்துள்ளது.
தமிழகத்தில் இன்று உறுதி செய்யப்பட்ட 231 தொற்றுகளில் 174 தொற்று சென்னையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் பாதித்துள்ள 1257 நபர்களில், 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்துள்ளவர்கள் எண்ணிக்கை 226-ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தவர்கள்
மண்டலம் வாரியாக இதுவரை திரு.வி.க நகரில் 253 பேரும்,  ராயபுரத்தில் 177 பேரும்,  தேனாம்பேட்டையில் 121 பேரும், கோடம்பாக்கத்தில் 119 பேரும், தண்டையார்ப்பேட்டையில் 86 பேரும், அண்ணாநகரில் 85 பேரும் பாதித்து உள்ளனர். மேலும், வளசரவாக்கத்தில் 69 பேரும், அம்பத்தூரில் 42 பேரும், அடையாறில் 20 பேரும்,  திருவொற்றியூரில் 15 பேரும்,  ஆலந்தூரில் 4 பேரும், பெருங்குடியில் 3 பேரும், மாதவரத்தில் 5 பேரும்,  சோழிங்கநல்லூரில் 3 பேரும், மணலியில் 5 நபரும் உள்ளனர்.
வயது வாரியாக பார்க்கையில்
30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 277 பேருக்கும், அதிகபட்சமாக 20 முதல் 29 வயது வரை உள்ள நபர்களில் 287 பேருக்கும், தொற்று உள்ளது. குறைந்தபட்சமாக 9 வயதுக்கு கீழ் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 80 வயதுக்கு மேல் 13 பேரும் பாதித்து உள்ளனர். 10 முதல் 19 வயதுள்ளோர் 109 பேருக்கும்,  40 முதல் 49 வயதுள்ளோர் 195 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 137 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 81 பேருக்கும், 70 முதல் 79 வயதுள்ளோர் 28 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad