Type Here to Get Search Results !

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமுதாய பரவல் நிலையை எட்டவில்லை - மத்திய அரசு; கர்நாடகாவில் மது விற்பனை; நீண்ட வரிசையில் நின்ற பெண்கள்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமுதாய பரவல் நிலையை எட்டவில்லை - மத்திய அரசு 
மத்திய அரசு, சுகாதாரத்துக்கும், பொருளாதாரத்துக்கும் சம முக்கியத்துவம் அளிக்கும். கொரோனா சமுதாய பரவல் நிலையை எட்டாத அளவுக்கு இந்தியா தன்னைத்தானே காப்பாற்றிக் கொண்டுள்ளது.

கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் ஒன்றும் பெரிய ராக்கெட் அறிவியல் அல்ல என்பதை நமக்கு உணர்த்திவிட்டது.

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கைகளையும், சுற்றுச்சூழலையும் சுத்தமாக பராமரித்து வருகிறோம். இதுவே ஒரு தொடர் பழக்கவழக்கமாக மாறும் என்று நம்புகிறேன். அப்படி மாறினால், கொரோனா பீதி முடிவடைந்து, திரும்பி பார்க்கும்போது, கெட்டதிலும் ஒரு நல்லது நடந்துள்ளதாக நாம் கருத முடியும்.

இந்த பழக்கவழக்கங்கள் தொற்றுநோய்களை குறைக்கும். ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும். நாம் சின்னம்மை, போலியோ ஆகிய தொற்றுநோய்களை தவிர, பிற தொற்றுநோய்களை முழுமையாக ஒழிக்கவில்லை. எனவே, மற்ற தொற்றுநோய்கள் மீண்டும் வரலாம்.

மேலும், இந்த கொரோனாவானது, நமது சுகாதார கட்டமைப்புகளை அதிகரிக்க ஒரு வாய்ப்பை உருவாக்கி உள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ், பாதுகாப்பு கவசங்கள், என்-95 ரக முக கவசங்கள் உற்பத்தியை தீவிரப்படுத்தி இருக்கிறோம்.

பரிசோதனை வசதிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மருந்து மூலப்பொருட்கள் உற்பத்தியையும் அதிகரிக்க முயற்சி நடந்து வருகிறது. இதன்மூலம் வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலைமை மாறும்.

சில மாநிலங்களில் மதுக்கடைகள் திறப்பால் பெருமளவு கூட்டம் திரண்டுள்ளது. எப்போதுமே பின்விளைவுகளை கணித்தே முடிவுகளை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு ஹர்ஷவர்தன் கூறினார்.

கர்நாடகாவில் மது விற்பனை; நீண்ட வரிசையில் நின்ற பெண்கள்
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  பின்னர் இந்த உத்தரவு கடந்த ஏப்ரல் 14ந்தேதி நீட்டிக்கப்பட்டது.  இதனால் கடந்த மே 3ந்தேதி வரை 19 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தது.

எனினும், கொரோனா பரவலின் தீவிரம் குறையாத நிலையில், மீண்டும் 2வது முறையாக ஊரடங்கு 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  ஊரடங்கு அமலான நிலையில், அன்று முதல் அனைத்து மாநிலங்களிலும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மது விற்பனையை தொடங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

கர்நாடக மாநிலத்திலும் 40 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுப்பிரியர்கள் அதிகாலையிலேயே கடைகள் முன்பு திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்றனர்.

ஆண்களுக்கு இணையாக பெண்களும் போட்டி போட்டு நீண்ட வரிசையில் முக கவசங்களை அணிந்தபடி, சமூக இடைவெளியை முறையாக பின்பற்றி, மதுபானங்களை வாங்கி பைகளில் போட்டு கொண்டு சென்றதை காண முடிந்தது. அங்கு நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும் ரூ.45 கோடிக்கு மது விற்பனையானதாக அந்த மாநில கலால் துறை தெரிவித்தது.

இதனை தொடர்ந்து நேற்றும் விற்பனை சூடு பிடித்தது.  இதுபற்றி கலால் துறை உயரதிகாரிகள் கூறும்பொழுது, ‘இந்தியாவில் தயாரான மதுபானம் 36.37 லட்சம் லிட்டர் அளவில் 4.21 லட்சம் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.  இதனால் ரூ.182 கோடி வருவாய் கிடைத்து உள்ளது.

இதேபோன்று 7.02 லட்சம் லிட்டர் அளவிலான பீர் 90 ஆயிரம் பெட்டிகள் வரை விற்று தீர்ந்துள்ளன.  இதனால் ரூ.15 கோடி அளவிற்கு வருவாய் கிடைத்து உள்ளது’ என தெரிவித்து உள்ளனர்.

‘முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் மது விற்பனையில் சாதனை படைத்து உள்ளது’ என பெயர் வெளியிட விருப்பமில்லாத அதிகாரியொருவர் தெரிவித்து உள்ளார்.  இதனால் கர்நாடகாவில் ஊரடங்கு தளர்வின் 2வது நாளில் ரூ.197 கோடி அளவுக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad