Type Here to Get Search Results !

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) மட்டும் 38 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1204-லிருந்து 1242 -ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) மட்டும் மேலும் 38 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) மட்டும் 38 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1242ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வீட்டுக் கண்காணிப்பில் 33,850 பேர் உள்ளதாகவும், 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad