Type Here to Get Search Results !

நாகப்பட்டினம், திருவள்ளூரில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா! தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு; ‘ஹாட் ஸ்பாட்’ - மத்திய அரசு

தமிழகத்திலேயே அதிக அளவாக நாகப்பட்டினம், திருவள்ளூரில் இன்று 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1204-லிருந்து 1242-ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம், திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின்  நாகப்பட்டினம், எண்ணிக்கை 38, திருவள்ளூரில் 40-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

தமிழகத்தின் 22 மாவட்டங்களை கொரோனா தொற்று அதிகம் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தேசிய அளவில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது.

தற்போது வரை, 1242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 14 பேர் உயிரிழந்துள்ளனர். 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 37 பேர் குணமடைந்துள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தின் 22 மாவட்டங்களை ‘ஹாட் ஸ்பாட்’ - மத்திய அரசு
கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு இரண்டாவது முறையாக ஊரடங்கை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பாதிப்பு அதிகம் உள்ளதால், மேலும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இது தொடர்பாக அரசு அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் 22 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகள் ஹாட் ஸ்பாட் என்று அழைக்கப்படுகின்றன. இந்த பகுதிகளில் கூடுதல் கவனம் எடுத்து மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தின், சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகை ஆகிய மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், தஞ்சை, திருவண்ணாமலை, காஞ்சி, சிவகங்கை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்களாக மாறலாம் என்றும் மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;
தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லை. இரண்டாவது நிலையில் தான் உள்ளோம்.  கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் குடும்பத்திற்கு சோதனை செய்யப்படுகின்றது என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். சுகாதாரத்துறைஅமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது;- “ உடல் கவசம், முகக் கவசங்கள் தேவையான அளவு உள்ளது; தட்டுப்பாடு இல்லை.

1.50 லட்சம் நோயாளிகளை குணப்படுத்தும் அளவுக்கு  மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளன.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஏற்படும் இறப்பு விகிதம் 1.1 சதவிகிதம் ஆகும். சாதாரண சளி காய்ச்சல் இருந்தாலே கொரோனா பரிசோதனை செய்வதை உறுதி செய்துள்ளோம்.   கொரோனாவில் இருந்து மருத்துவர்களை பாதுக்காக முக்கியத்துவம் அளிக்கிறோம்” என்றார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad