Type Here to Get Search Results !

திருப்பூரில் ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா! தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு

தமிழகத்திலேயே அதிக அளவாக திருப்பூரில் இன்று 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
full-width தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969-லிருந்து 1075-ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்  தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் இன்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்வு திருப்பூரில் இன்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

* இதுவரை 8 மருத்துவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* தமிழகத்தில் கொரோனா வைரஸ் தோற்றால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
* கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 50 பேர் குணமடைந்து வீடு      திரும்பியுள்ளனர்

* இன்று ஒரே நாளில் 6 பேர் குணமடைந்துள்ளனர்.
* தமிழகத்தில் 39,041 பேர் வீட்டுகண்காணிப்பில் உள்ளனர்.
* 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்தவர்கள் எண்ணிக்கை 58,189 பேர்.
* நாடு முழுவதும் கொரோனா பரவல் 459 தடுப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* 10,655 மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளன
* அரசு கண்காணிப்பில் 162 பேர் உள்ளனர்.
* தமிழ்நாடு முழுவதும் 20,40,289 வீடுகள் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.

* அரசு மருத்துவமனைகளில் 14 ஆய்வகங்களும், 9 தனியார் ஆய்வகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன
* கொரோனா சோதனைக்கான தனியார் ஆய்வகங்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்.
* தமிழகத்தில் இதுவரை 23 பரிசோதனை ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
* கொரோனா பாதித்தவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* ஐசிஎம்ஆர் பரிந்துரையை ஏற்று 5 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
* ஐ.வி.ஆர்.எஸ். மூலம் கொரோனா பாதிப்பு அறிகுறி தெரிந்து கொள்ள 94999 12345 எண் அறிமுகம்

* தமிழகத்தில் 1.5 லட்சம் கர்ப்பிணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
* தமிழகம் முழுவதும் உள்ள கர்ப்பிணி பெண்களை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமனம்
* 5 கர்ப்பிணிக்கு ஒரு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லை. இரண்டாவது நிலையில் தான் உள்ளோம்.  கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் குடும்பத்திற்கு சோதனை செய்யப்படுகின்றது என்று தெரிவித்தார்.

மாவட்ட வாரியாக பார்க்கையில் திருப்பூரில் இன்று அதிகபட்சமாக 35 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அடுத்ததாக கோவையில் 22 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;
மொத்தமாக பாதிப்பு எண்ணிக்கையை கணக்கிட்டால் சென்னையில் 199 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக கோவையில் 119 பேரும், ஈரோட்டில் 64 பேரும் திருப்பூரில் 60 பேரும், நெல்லையில் 56 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad