Type Here to Get Search Results !

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 106 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969-லிருந்து 1075 -ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969-லிருந்து 1075 -ஆக உயர்வு
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 106 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ்  தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1075ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் வீட்டுக் கண்காணிப்பில் 59,918 பேர் உள்ளதாகவும், 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் ஏற்பட்ட பாதிப்பு மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மேலும் 6 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்.

தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு.

full-width கொரோனா சோதனைக்கான தனியார் ஆய்வகங்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்

4 தனியார் மருத்துவர்கள் உள்பட 8 மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு

கொரோனா பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழப்பு - பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

கொரோனா பாதிப்பு நிலவரம்

திருப்பூரில் இன்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று - மொத்த எண்ணிக்கை 60 ஆக உயர்வு.

கோவையில் 22 பேர், சென்னையில் மேலும்18 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.

சென்னையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 199 ஆக உயர்வு.

கோவையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்தது.

ஈரோட்டில் இன்று 4 பேர் உள்பட மொத்தம் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தனிமைப்படுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு உட்பட்டே கொரோனா பாதிப்பு.

நாளை பிரதமருடனான ஆலோசனைக்கு பின் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad