Type Here to Get Search Results !

லாஸ்வேகாஸ் தாக்குதலில் தீவிரவாதத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லை: எஃப்.பி.ஐ. தகவல்





லாஸ்வேகாஸ்: லாஸ்வேகாஸ் தாக்குதலில் தீவிரவாதத் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் இசை கச்சேரி நடந்த போது ஸ்டீஃபன் பெடாக் என்பவன் துப்பாக்கி சூடு நடத்தியதில் 59 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவை உலுக்கிய இத்தாக்குதலை நடத்துவதற்கு முன்னதாக ஸ்டீஃபன் பெடாக் இஸ்லாமிய மதத்திற்கு மாறியதாகவும், தங்களால் இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது எனவும் ஐ.எஸ். இயக்கம் அறிவித்தது.

இந்நிலையில், லாஸ்வேகாஸ் தாக்குதலில் தீவிரவாத தொடர்பு இல்லை என எஃப்.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது. தாக்குதல் தொடர்பாக யாரையும் இன்னும் காவலில் எடுக்கவில்லை எனவும் எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது. இதனிடையே, ஸ்டீஃபன் பெடாக் உடன் இருந்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என தான் நம்பியதாகவும், தாக்குதலுக்கான சதித் திட்டத்தில் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் பெடாக்கின் தோழி மருலோ டான்லி கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad