சென்னை: தமிழகத்தில் இதுவரை டெங்குவுக்கு 400 பேர் பலியாகியுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் உள்ள கொளத்தூர் தொகுதியில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தினமும் 10 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசு குறைத்து காட்டுகிறது.
டெங்கு காய்ச்சலுக்கு 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசு ஒப்புக் கொண்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 400 பேர் இறந்து இருக்கலாம் என எங்களுக்கு தகவல் வந்துள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு 26 பேர் தான் இறந்துள்ளதாக கூறி வருகிறது. அரசு தவறான தகவல்களை பரப்பி வருகிறது. டெங்கு பரவுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. குட்கா ஊழலை தொடர்ந்து தற்போது, ஒயர்லெஸ் ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறையிலேயே ரூ.88 கோடி ஊழல் நடந்துள்ளது வெட்கக்கேடான செயலாகும். நாடு எந்த நிலைக்கு போகிறது என்பதை இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment
0 Comments