Type Here to Get Search Results !

இனி அரசியல் வேண்டாம்: ஜெயப்பிரதா








1980களில் முன்னணி ஹீரோயினாக இருந்த ஜெயப்பிரதா, யாகம் என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க வந்துள்ளார். ஆகாஷ் குமார்் ஹீரோ. அவரது தாயாக ஜெயப்பிரதா, தந்தையாக நெப்போலியன் நடித்துள்ளனர். மிஸ்தி ஹீரோயின். இயக்கம், ஷங்கர் உதவியாளர் என்.நரசிம்மா. இந்தப் படம், சரபா என்ற பெயரில் தெலுங்கிலும் தயாராகியுள்ளது. இதில் நடித்தது பற்றி ஜெயப்பிரதா கூறியதாவது:இடைப்பட்ட நாட்களில் நான் அரசியலுக்குச் சென்றுவிட்டதால், சினிமாவில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தேன். இப்போது அரசியலை விட்டு விலகிவிட்டேன். இதனால் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளேன். நல்ல கதைகளுக்காகவும், கேரக்டருக்காகவும் காத்திருந்தபோது இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. கடவுள் சக்திக்கும், தீயசக்திக்குமான போராட்டம்தான் கதை. தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad