டிஎன்பிஎல் டி20 தொடர் இன்று கோலாகல தொடக்கம்: பேட்ரியாட்ஸ் - டிராகன்ஸ் மோதல்





சென்னை:

தமிழ்நாடு பிரிமியர் லீக் (டிஎன்பிஎல்) 20 ஓவர் போட்டித் தொடரின் 2வது சீசன், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு கோலாகலமாகத் தொடங்குகிறது. தமிழக அளவில் 8 நகரங்களை அடிப்படையாகக் கொண்ட அணிகள் மோதும் இந்த தொடர், கடந்த ஆண்டு முதல் முறையாக அறிமுகமாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இந்த தொடரின் 2வது சீசன் இன்று தொடங்கி ஆகஸ்ட் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், திருச்சி வாரியர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர்ஜயன்ட் ஆகிய 8 அணிகள் களமிறங்குகின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதவுள்ளன. லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இறுதிப் போட்டி ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற உள்ளது. போட்டிகள் அனைத்தும் சென்னை, நெல்லை, திண்டுக்கல் மைதானங்களில் நடைபெற உள்ளன. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url