விளையாட்டு துளிகள்
* இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமால் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்திய அணியுடன் காலே சர்வதேச ஸ்டேடியத்தில் 26ம் தேதி தொடங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சுழற்பந்துவீச்சாளர் ரங்கனா ஹெராத் கேப்டனாக செயல்படுவார்.
* இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த சம்பகா ராமநாயகே ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய பவுலிங் கோச்சாக முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சமிந்தா வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
* யுஎஸ் ஓபன் கிராண்ட் பிரீ கோல்டு பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட இந்திய வீரர்கள் காஷ்யப், சமீர் வர்மா, பிரணாய் தகுதி பெற்றுள்ளன