நடிகையுடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்ட ரசிகருக்கு அடி விழுந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியில் முன்னணி நடிகையாக இருப்பவர் கேத்ரினா கைஃப் . இவர், மும்பையில் தோல்நோய் சிகிச்சை நிபுணர் ஒருவரை சந்தித்துவிட்டு காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட ரசிகர் ஒருவர், காரைப் பின் தொடர்ந்து கேத்ரினாவின் வீட்டுக்கு வந்தார். கேட் வாசலில் நின்று, கேத்ரினாவுடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என்றார். வாட்ச்மேன் வெளியேறச் சொன்னார்.
இதையடுத்து, ’கேத்ரினா , உங்களோட செல்ஃபி எடுக்கணும்’ என்று கத்தினார் வெளியில் இருந்து. கேத்ரினா இதைக் கண்டுகொள்ளாமல் வீட்டுக்குள் சென்றார். பின்னர் வீட்டுக்கு வெளியே வந்த கேத்ரினாவின் கார் டிரைவர், ’ஏன்டா கத்துறே’ என்று அந்த ரசிகரின் முகத்தில் ஓங்கி குத்தினாராம். பின்னர் அவரை அங்கிருந்து வெளியே தள்ளினார். இதனால் கண்ணீர் விட்ட அந்த ரசிகர் அழுதபடியே வெளியேறினார்.
Post a Comment
0 Comments