Type Here to Get Search Results !

விஜயகாந்த் மீண்டும் தனது வேலையை ஆரம்பித்துவிட்டார்




தேமுதிக தலைவர் விஜயகாந்த் பண்ருட்டியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தொண்டரை அவரது மனைவி, குழந்தைகள் முன் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகமே பரபரப்பாக இருக்கும் இவ்வேளையில் தேமுதிக உங்களுடன் நான் என்னும் நிகழ்ச்சியை நடத்து வருகிறது.  இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடக்கும் . இறுதியில் கட்சித் தொண்டர்களுடன் விஜயகாந்த் புகைப்படம் எடுத்துக்கொள்வார்.  இந்நிலையில், நேற்று உங்களுடன் நான் நிகழ்ச்சி, சிதம்பரம், பண்ருட்டி உள்ளிட்ட ஊர்களில் நடந்தது. சிதம்பரத்தில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, பண்ருட்டி காடாம்புலியூரில் ஒரு திருமண மண்டபத்தில் உங்களுடன் நான் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாலை 5 மணியளவில் சென்றுள்ளார்.  அப்போது, அங்கு தொண்டர்கள் கூட்டம் அதிகமிருந்ததால், விஜயகாந்த் வந்து இறங்கியவுடன், புகைப்படம் எடுத்துக் கொள்ள தொண்டர்கள் ஆர்வம் காட்டியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், கூட்டத்தை ஒழுங்கப்படுத்தச் சொல்லிவிட்டு, விஜயகாந்ந், அங்கிருந்த அறைக்குள் சென்றுவிட்டார். சிறிதுநேரம் கழித்து மீண்டும் வந்ததும் அப்போதும் மேடை மேல் நிறைய தொண்டர்கள் ஏறி நின்றுகொண்டிருந்தனர். போலீஸ் பாதுகாப்பும் அப்போது இல்லை.  இதனால், மீண்டும் அவர் அறைக்குள் சென்றார். பிறகு, கூட்ட்டத்தை ஓரளவு நிர்வாகிகள் கட்டுப்படுத்தினர். அதன்பிறகு, மேடையில் தொண்டர்கள் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.  அப்போது, திடீரென ஒரு தொண்டரை அடித்துள்ளார். அடித்த சில நிமிடங்களிலேயே அந்த தொண்டருடன் சிரித்துப் பேசியுள்ளார். தொண்டரும் அடிவாங்கியதை மறந்து சிரித்துப் பேசி, புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.  தேர்தல் பிரச்சாரத்தின்போது, வேட்பாளரை அடித்த சம்பவம் நினைவிருக்கலாம். செய்தியாளர் சந்திப்பின்போது, 'தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ' என்று விஜயகாந்த் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியதுண்டு. 'தலைவர் சினிமாவில் ஸ்டண்ட் மேன்களை அடித்ததை இன்னும் மறக்கவில்லை போலும்' என அவரது தொண்டர்கள் இதை காமெடியாக நினைத்து பேசி சிரித்துள்ளனர்.  



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad