Type Here to Get Search Results !

ஷூட்டிங்கில் கதறி அழுத ராமராஜன்






நடிகர் ராமராஜன் என்றால் கண்ணை கூசச்செய்யும் கலர், கலர் உடைகள் என பலரும் சொல்வர். அப்போதிருந்த ஃபேஷனை இப்போது பலரும் கிண்டல் செய்வார்கள்.  1987 ல் வந்த எங்க ஊரு பாட்டுக்காரன் படம் தான் அவரை தமிழ் சினிமாவில் ஹீரோ என அறிமுகப்படுத்தியது. இப்படத்திற்காக அவர் பேச்சி பசுமாடு, காளை, கன்றுக்குட்டி என 40 நாட்களும் ஷூட்டிங்கில் அதோடு தான் டைம் பாஸ்.  சேர் போட்டு எப்போதும் அதனருகிலே தான் இருப்பாராம். தண்ணீர் வைப்பது, புல் போடுவது என அதையே சுற்றி சுற்றி வந்தாராம்.  படத்தின் காட்சியில் அவர் பால் கறப்பது போன்றது உண்மையிலேயே எடுக்கப்பட்டது. தினமும் ட்ரவுசர், துண்டு என படம் முழுக்க அவரை அப்பபடியே பார்த்து பசு தினமும் அவரிடம் அன்பாக பழகுவது, எச்சில் நாக்கால் முகத்தை வருடவும் செய்துள்ளது.  ஷுட்டிங் முடிந்த கடைசி நாள் ராமராஜன் தன் உதவியாளரிடம் பேச்சியை நான் எப்படி பிரிவது என வருத்தப்பட்டுள்ளார். பசுவிடம் சென்று அதை தடவிக்கொடுக்க பிரிவை உணர்ந்த பசு கண்ணீர் விட, ராமராஜனும் கண்கலங்கி திரும்பிப்பார்க்காமல் காரில் ஏறி சென்றுவிட்டாராம்.  இரண்டு வருடங்கள் கழித்து வேறொரு படத்திற்காக ஷூட்டிங் சென்றபோத பசு இறந்த செய்தி கேட்டு மேக்கப் அறைக்குள் கதறி அழுதாராம்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad