ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் புற்றுநோய் போன்று இருந்த குழுவில் வாட்சனும் ஒருவராக இருந்தார் என்று முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கிண்ண தொடரில் மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் பிறகு ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற கிளார்க், இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் முடிந்தவுடன் டெஸ்ட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார். இந்நிலையில் தற்போது அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை சுயசரிதையாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டையொட்டி அவர் அளித்த பேட்டியில், தனது பழைய பகையை வெளிப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் புற்றுநோய் போன்று இருந்த குழுவில் முன்னாள் ஆல்ரவுண்டர் வாட்சனும் ஒரு அங்கமாக இருந்ததாக கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணி கடந்த 2013ம் ஆண்டு இந்தியாவி்ல் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளில் தோற்ற போது, அடுத்த இரண்டு டெஸ்டில் எழுச்சி பெற என்ன செய்ய வேண்டும் என்று தெரிவிக்குமாறு வீரர்களிடம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் கேட்டுக் கொண்டது. ஆனால் வாட்சன், பேட்டின்சன், மிட்செல் ஜான்சன், கவாஜா ஆகிய நான்கு வீரர்கள் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, 3வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டனர். பயிற்சியின்போது சரியாக செயல்படாததால் அவர்கள் நீக்கப்பட்டதாக கிளார்க் மற்றம் பயிற்சியாளர் ஆர்தர் கூறினர். இந்த தொடரில் ஆஸ்திரேலியா 0-4 என தொடரை இழந்து
ஒயிட்-வாஷ் ஆனது குறிப்பிடத்தக்கது
Post a Comment
0 Comments