Type Here to Get Search Results !

எனக்கு பாய்பிரண்டுகள் கூட கிடையாது சுவாதி




‘சுப்பிரமணிய புரம்’ படத்தில் அறிமுகமானவர் சுவாதி. சிறிய இடை வெளிக்குப் பிறகு ‘யாக்கை’ படத்தில் ‘கழுகு’ கிருஷ்ணா ஜோடியாக நடித்திருக்கிறார். இது பற்றி கூறிய சுவாதி…  “சுப்பிர மணியபுரம்’ படத்துக்குப் பிறகு ‘யட்சன்’, ‘வடகறி’, படங்களில் வேறு விதமான வேடங்களில் நடித்தேன். இப்போது ‘யாக்கை’ படத்தில் மாற்றுத்திறனாளிகள் பள்ளியின் ஆசிரியராக வருகிறேன். இதன் இயக்குனர் குழந்தை வேலப்பன், என்னிடம், ‘உன் தெத்துப்பல்லுக்கே’ தனிஷாட் வைத்திருக்கிறேன்’ என்று கேலி செய்தார். இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷ் பாடி இருக்கிறார். அந்த பாடல் காட்சியில் நானும் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.  எனக்கு திருமணம் ஆகிவிட்டதாக யாரோ வதந்தியை பரப்பி விட்டிருக்கிறார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம். அப்படி எதுவும் நடக்கவில்லை. உண்மையை சொன்னால் எனக்கு பாய் பிரண்டுகள் கூட கிடையாது. ஒரு கால கட்டத்தில் எல்லா நாயகிகளைப் பற்றியும் இப்படி செய்தி வரும். அது போல் தான் இதுவும்.  இந்த வதந்திக்கு விளக்கம் சொல்லி போரடித்து விட்டது. இதுவும் எனக்கு ஒரு விளம்பரம் என்று எண்ணிக் கொள்ள வேண்டியது தான்.  என்னுடைய அப்பா மாதிரி நல்ல குணம் கொண்ட ஆண் அமைய வேண்டும். ஒரே துறையில் உள்ளவர்களை திருமணம் செய்தால் புரிந்து கொள்ள முடியும். நேரம் வரும் போது பார்க்கலாம்.  மலையாளம், தெலுங்கில் நிறைய படங்கள் நடித்து இருக்கிறேன். பாராட்டுகிறார்கள். ஏனோ தமிழில் அதிக வாய்ப்புகள் வரவில்லை. நடிப்பு இருந்தால் கவர்ச்சியை நம்ப வேண்டியதில்லை. ‘யாக்கை’ படம் எனக்கு பெயர் சொல்லும் படமாக அமையும்” என்றார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad