Type Here to Get Search Results !

சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விடைபெறுகிறார் டில்ஷான்




இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் ஆரம்ப பேட்டிங்  வீரருமான திலகரட்ண டில்ஷான், சர்வதேச ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.  2019 உலக கோப்பைக்கான அணியை உருவாக்கும் பணியில் இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் மற்றும் தேர்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில், தேர்வாளர்களிடமிருந்து வந்த அழுத்தத்தை தொடர்ந்தே 39 வயதான டில்ஷான் தனது ஓய்வை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.  ஆஸ்திரேலிய  அணிக்கெதிராக தம்புள்ளையில் இடம்பெறவுள்ள 3வது ஒருநாள் சர்வதேச போட்டியுடனும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள 2வது 20 ஓவர் போட்டியுடனும் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக டில்ஷான் தெரவித்துள்ளார்.  இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான டில்ஷான், 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5492 ரன்களையும்  39 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதேவேளை 329 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 10248 ரன்களையும் 106 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.  78 20 ஒவர் போட்டிகளில் விளையாடி 1884 ரன்களையும் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது












Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad