என்னை அறிந்தால் படத்துக்கு பிறகு சிம்பு நடிப்பில் அச்சம் என்பது மடமையடா, தனுஷ் நடிப்பில் என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களை இயக்கி வருகிறார் கெளதம்மேனன். இதில் சிம்பு நடித்து வந்த அச்சம் என்பது மடமையடா படத்தில் இன்னும் ஒரு பாடல் மட்டுமே பேலன்ஸ் உள்ளதாம். சிம்பு-கெளதம்மேனனுக்கிடையே ஏற்பட்ட சம்பள பிரச்சினையால் மேற்கொண்டு அந்த படத்துக்கு கால்சீட் கொடுக்காமல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்துக்கு கால்சீட் கொடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார் சிம்பு.</அதேபோல் கெளதம்மேனனும், சிம்பு கால்சீட் தராதது பற்றி கவலைப்படாமல், தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கவனத்தை திருப்பியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முதல்கட்டமாக நடந்து முடிந்த நிலையில், தற்போது வெற்றிமாறனின் வடசென்னையில் நடித்துக்கொண்டி ருக்கிறார் தனுஷ். மேலும், தனுஷ் படத்தை அடுத்து சந்தானம் நடிக்கும் ஒரு படத்தை கெளதம்மேனன் இயக்கயிருப்பதாக தற்போது கோலிவுட்டில் ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.தில்லுக்குத்துட்டு படத்தையடுத்து சர்வர் சுந்தரத்தை முடித்த சந்தானம், செல்வராகவன் இயக்கும் படத்தில் அடுத்து நடிக்கிறார். அந்த படத்தை முடித்ததும் கெளதம்மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறாராம். கெளதம்மேனன் ரெடி பண்ணி வைத்திருக்கும் ஒரு கதைக்கு சந்தானம்தான் பொருத்தமாக இருப்பார் என்று பலரும் சொன்னதை அடுத்து சந்தானத்தை தனது புதிய படத்தில் நடிக்க வைக்கும் முடிவில் இருக்கிறாராம் கெளதம்மேனன்
கெளதம்மேனன் படத்தில் சந்தானம்
July 29, 2016
0
என்னை அறிந்தால் படத்துக்கு பிறகு சிம்பு நடிப்பில் அச்சம் என்பது மடமையடா, தனுஷ் நடிப்பில் என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களை இயக்கி வருகிறார் கெளதம்மேனன். இதில் சிம்பு நடித்து வந்த அச்சம் என்பது மடமையடா படத்தில் இன்னும் ஒரு பாடல் மட்டுமே பேலன்ஸ் உள்ளதாம். சிம்பு-கெளதம்மேனனுக்கிடையே ஏற்பட்ட சம்பள பிரச்சினையால் மேற்கொண்டு அந்த படத்துக்கு கால்சீட் கொடுக்காமல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்துக்கு கால்சீட் கொடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார் சிம்பு.</அதேபோல் கெளதம்மேனனும், சிம்பு கால்சீட் தராதது பற்றி கவலைப்படாமல், தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கவனத்தை திருப்பியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முதல்கட்டமாக நடந்து முடிந்த நிலையில், தற்போது வெற்றிமாறனின் வடசென்னையில் நடித்துக்கொண்டி ருக்கிறார் தனுஷ். மேலும், தனுஷ் படத்தை அடுத்து சந்தானம் நடிக்கும் ஒரு படத்தை கெளதம்மேனன் இயக்கயிருப்பதாக தற்போது கோலிவுட்டில் ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.தில்லுக்குத்துட்டு படத்தையடுத்து சர்வர் சுந்தரத்தை முடித்த சந்தானம், செல்வராகவன் இயக்கும் படத்தில் அடுத்து நடிக்கிறார். அந்த படத்தை முடித்ததும் கெளதம்மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறாராம். கெளதம்மேனன் ரெடி பண்ணி வைத்திருக்கும் ஒரு கதைக்கு சந்தானம்தான் பொருத்தமாக இருப்பார் என்று பலரும் சொன்னதை அடுத்து சந்தானத்தை தனது புதிய படத்தில் நடிக்க வைக்கும் முடிவில் இருக்கிறாராம் கெளதம்மேனன்
Tags
Post a Comment
0 Comments