இந்தியா-மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் தொடங்குகிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க அந்நாட்டுக்குச் சென்றுள்ள இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் 1 இன்னிங்ஸ் 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அனில் கும்ப்ளே பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதை அடுத்து, இந்திய அணி விளையாடிய முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் 2016-17 சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ள இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்புடன் களமிறங்குகிறது. போட்டி நடைபெறவுள்ள சபீனா பார்க் மைதானத்தைப் பொறுத்த வரையில், இதற்கு முன்பு இங்கு நடந்த டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் 4 நாள்களிலேயே நிறைவடைந்துள்ளன. அதில், கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போட்டியும் அடங்கும். ஆட்டத்தைப் பொறுத்த வரையில், முதல் டெஸ்டில் காயம் கண்ட இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய் களமிறங்குவாரா என்பது உறுதிபடத் தெரியவில்லை. புதன்கிழமை வலைப் பயிற்சியில் கலந்துகொண்ட அவர், வியாழக்கிழமை பயிற்சியில் கலந்துகொள்ளவில்லை. அவர் களமிறங்காத பட்சத்தில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு இருக்கலாம் எனத் தெரிகிறது. முதல் டெஸ்டில் இரட்டைச் சதமடித்த கோலி, இரண்டாவது டெஸ்டிலும் அதே ஃபார்மில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம். கடந்த போட்டியில் 5 பந்துவீச்சாளர்கள் வியூகத்துடன் களமிறங்கிய கோலி, இந்தமுறையும் அதே வியூகத்தை கையாளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்டில் சிறப்பாகச் செயல்பட்ட அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு, அமித் மிஸ்ராவுக்கு ஒய்வு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. ஆன்டிகுவா டெஸ்டில் அஸ்வின் 7 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், சதமடித்தும் அசத்தியது குறிப்பிடத்தக்கது. வேகப்பந்து வீச்சுக்கு இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சமி ஆகியோர் உள்ளனர். மறுமுனையில், சொந்த மண்ணில் முதல் டெஸ்டில் வெற்றியை பறிகொடுத்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, இரண்டாவது டெஸ்டில் இந்தியாவுக்கு தோல்வியை பரிசளிக்க முனையும்.
இரண்டாவது வெற்றி முனைப்பில் இந்தியா
July 30, 2016
0
இந்தியா-மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் தொடங்குகிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க அந்நாட்டுக்குச் சென்றுள்ள இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் 1 இன்னிங்ஸ் 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அனில் கும்ப்ளே பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதை அடுத்து, இந்திய அணி விளையாடிய முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் 2016-17 சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ள இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்புடன் களமிறங்குகிறது. போட்டி நடைபெறவுள்ள சபீனா பார்க் மைதானத்தைப் பொறுத்த வரையில், இதற்கு முன்பு இங்கு நடந்த டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் 4 நாள்களிலேயே நிறைவடைந்துள்ளன. அதில், கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போட்டியும் அடங்கும். ஆட்டத்தைப் பொறுத்த வரையில், முதல் டெஸ்டில் காயம் கண்ட இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய் களமிறங்குவாரா என்பது உறுதிபடத் தெரியவில்லை. புதன்கிழமை வலைப் பயிற்சியில் கலந்துகொண்ட அவர், வியாழக்கிழமை பயிற்சியில் கலந்துகொள்ளவில்லை. அவர் களமிறங்காத பட்சத்தில் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு இருக்கலாம் எனத் தெரிகிறது. முதல் டெஸ்டில் இரட்டைச் சதமடித்த கோலி, இரண்டாவது டெஸ்டிலும் அதே ஃபார்மில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம். கடந்த போட்டியில் 5 பந்துவீச்சாளர்கள் வியூகத்துடன் களமிறங்கிய கோலி, இந்தமுறையும் அதே வியூகத்தை கையாளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்டில் சிறப்பாகச் செயல்பட்ட அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு, அமித் மிஸ்ராவுக்கு ஒய்வு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. ஆன்டிகுவா டெஸ்டில் அஸ்வின் 7 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், சதமடித்தும் அசத்தியது குறிப்பிடத்தக்கது. வேகப்பந்து வீச்சுக்கு இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சமி ஆகியோர் உள்ளனர். மறுமுனையில், சொந்த மண்ணில் முதல் டெஸ்டில் வெற்றியை பறிகொடுத்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, இரண்டாவது டெஸ்டில் இந்தியாவுக்கு தோல்வியை பரிசளிக்க முனையும்.
Tags
Post a Comment
0 Comments