Type Here to Get Search Results !

யார் வந்தாலும் இதை செய்யுங்க - கெஞ்சிய சிவகுமார்



தமிழக சட்டசபை தேர்தலில் பெரும்பாலான நட்சத்திரங்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். சென்னை இந்தி பிரசார சபை வாக்குச்சாவடியில் நடிகர் சிவகுமார், கார்த்தி மற்றும் டி.ஆர் ஆகியோர் தனது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். சிவகுமார் பேசுகையில், யார் வெற்றி பெற்றாலும் உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து உடனடியாக மது விலக்கை கொண்டு வாருங்கள். 1 கோடி பேரை குடிகாரர்களாகவும், 50 லட்சம் பேரை குடிநோயாளிகளாகவும் மாற்றி விட்டோம். இதனால் தான் பெண்கள் பாதுகாப்பு குறைந்து, கற்பழிப்புகள் அதிகம் நடைபெறுகின்றது. இலவசம் கொடுத்து மக்களை பிச்சையெடுக்க வைக்காதீர்கள். நல்ல திட்டங்களை தந்து மக்கள் வாழ்வாதாரத்திற்கு உதவுங்கள். நிறைய விவசாய நிலம் இருக்கிறது, ஆனால் நீர் ஆதாரம் இல்லை. வடநாட்டில் என்ன நடக்கிறது, கங்கையும், யமுனையும் ஒவ்வொரு பருவமழை காலத்திலேயும் பேய்தனமாக மழை பெய்து ஊரையை அடித்துக் கொண்டு போகிறது. ஆயிரக்கணக்கான பேர் செத்துக் கொண்டிருக்கிறார்கள். கங்கையும், காவிரியையும் இணைப்பது மாதிரி தெரியவில்லை, இது நடக்ககூடிய விடயம் தான். ஆந்திராவில் கூட கோதாவரி, கங்கையை ஒன்றாக இணைத்தார்கள். நம்ம தமிழ்நாட்டில் இதையெல்லாம் பண்ணவில்லை என்றாலும், தயவுசெய்து ஆறு, ஏரி, குளங்களை தூர்வார வேண்டும், பருவமழை பெய்யும் போது தண்ணீரை சேர்த்து வைத்தால் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும், அடுத்த தலைமுறைக்காக மரங்களை நட வேண்டும் என பேசியுள்ளார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad