Type Here to Get Search Results !

சென்னை வீரா்கள் தான் குஜராத் அணியின் முதுகெலும்பு




சென்னை அணியில் பல ஆண்டுகள் ஒன்றாக விளையாடிய சில வீரா்கள் குஜராத் அணியில் இடம்பிடித்துள்ளனா், தற்போது, அவர்கள் தான் குஜராத் அணியின் முதுகெலும்பாக செயல்பட்டு வருகின்றனா் என குஜராத் அணி வீரர்களில் ஒருவரான டேல் ஸ்டைன் தெரிவித்துள்ளாா்.  அவர் மேலும் கூறுகையில், கடந்த டிசம்பா் மாதம் இடம்பெற்ற ஏலத்தின் போது, தடைசெய்யப்பட்ட சென்னை அணியில் விளையாடிய நான்கு வீரா்களை, தங்கள் அணிக்கு சொந்தமாகிய விடயத்தில், குஜராத் அணியின் உாிமையாளா் கேசாவ் பன்சால் மற்றும் அணி நிர்வகிகள் மிகவும் திறமையாக செயல்பட்டுள்ளனா்.  மெக்கல்லம், பிராவோ, ஜடேஜா மற்றும் அணித்தலைவர் ரெய்னா ஆகியோா் பல காலமாக சென்னை அணியில் ஒன்றாக விளையாடி இருக்கிறாா்கள். அவா்களின், அந்த அனுபவம் மற்றும் நட்புணர்வு எங்கள் அணிக்கு ஒரு பொிய பலமாக இருக்கிறது.  ரெய்னாவின் அணித் தலைமை அற்புதமாக உள்ளது, ரெய்னா அனைத்து விடயத்திலும் மிக எளிமையாக செயல்படுவாா். ரெய்னா மற்றும் எங்கள் அணி பயிற்சியாளா்கள், வீரா்களை அணுகும் முறை மிக எளிமையாக இருக்கும். அதன் விளைவே எங்கள் அணி களத்தில் திறமையாக செயல்படுகின்றது.  மேலும், எங்கள் அணியில் வெளிநாட்டு வீரா்கள் குறைவாகவே இடம்பெற்றுள்ளனா். ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் எந்த 11 போ் விளையாட போகிறார்கள் என்பது குறித்து தெளிவான திட்டம் இருக்கும்.  முக்கியமாக, எங்கள் அணியில் 11 வீரா்களில் 9 வீரர்கள் பந்துவீசுபவா்கள், அதுவும் எங்கள் அணிக்கு ஒரு மிக பொிய பலம், இவை அனைத்தும் தான் ஐ.பி.எல் தொடாில், குஜராத் திறமையாக செயல்பட்டு வருவதற்கு உறுதுணையாக இருக்கிறது என கூறியுள்ளாா்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad