Type Here to Get Search Results !

இந்தியா மீது அப்ரிடிக்கு அளவில்லாத பாசம் சிக்கலில் மாட்டினர்




பாகிஸ்தானை விட இந்தியாவில் உள்ள ரசிகர்கள் அதிக பாசக்காரர்கள் என்று புகழ்ந்து பேசிய அப்ரிடிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கும் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி பல்வேறு பிரச்சனைகளை தாண்டி இந்தியாவுக்கு வந்துள்ளது.  அங்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அப்ரிடி, "இந்திய ரசிகர்கள் மிகவும் பாசக்காரர்கள், அவர்களை என்றும் நினைவில் வைத்திருப்பேன். இங்கு பாதுகாப்பு பிரச்சனைகள் ஏதும் இல்லை" என்று கூறியிருந்தார்.  இந்தியாவை பற்றி அப்ரிடி புகழ்ந்து பேசியதால் இதற்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் அஜார் சாதிக் என்ற மூத்த வழக்கறிஞர் ஒருவர் லாகூர் உயர்நீதிமன்றத்தில் அப்ரிடி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.  இதனையடுத்து அப்ரிடி தனது கருத்து குறித்து 15 நாட்களுக்குள் முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  வழக்கறிஞர் அஜார் சாதிக் கூறுகையில், பாகிஸ்தானை விட இந்திய ரசிகர்களை பாராட்டி பேசியது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.  மேலும், இது குறித்த விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷாரியார் கானிடம் தெரிவித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad