Type Here to Get Search Results !

பாகிஸ்தான் ரசிகரை தண்டனையில் இருந்து மீட்கப்போகும் கோஹ்லி



இந்திய கொடியை வீட்டின் மேல் பறக்கவிட்டு சிறை தண்டனை பெற்ற பாகிஸ்தான் ரசிகருக்கு கோஹ்லி உதவப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் பஞ்சாப் மாநிலம் ஓகாரா மாவட்டத்தில், உமர் ட்ராஸ் என்ற கோஹ்லியின் தீவிர ரசிகர் ஒருவர் உள்ளார். இவர் கோஹ்லியின் தீவிர ரசிகர்.  2வது டி20 போட்டியில் கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தை பார்த்த உற்சாகத்தில் இந்திய தேசிக் கொடியை தனது வீட்டின் மேல் பறக்கவிட்டார்.  இதனையடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்ட உமருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது.  இந்நிலையில் சிறை தண்டனை பெற்றுள்ள தனது பாகிஸ்தான் ரசிகருக்கு கோஹ்லி உதவி செய்யப் போவதாக கூறப்படுகிறது.  இது பற்றி கோஹ்லியின் சகோதரர் விகாஸ் கூறுகையில், ஆமாம், நாங்கள் அந்த விஷயத்தை கேள்விப்பட்டோம்.  இதற்காக சரியான ஆட்களை சந்தித்து பாகிஸ்தான் அரசுடன் பேசுவோம். இது பற்றி விராட் கோஹ்லியிடம் பேசுவேன் என்று கூறியுள்ளார்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad