பிள்ளைதாச்சி மகளையும், அவளது புருஷனையும் ஜாதி கௌரவத்திற்காக துடிக்க, துடிக்க கொல்லும் ஜமீனையும், அவரது வாரிசுகளையும்... பழி தீர்க்க களம் இறங்கும் ஜமீன் மகளின் ஆத்மா சாந்தி அடைந்ததா.?, இல்லையா..? என்பது தான் அரண்மனன - 2 திரைப்படம். கதாநாயகர்ளாக சுந்தர்.சி, சித்தார்த், சூரி வைபவ் (கெஸ்ட் ரோல்) உள்ளிட்டோர் நடிக்க, கதாநாயகியர் த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா உள்ளிட்டோருடன் இப்படத் தயாரிப்பாளர் குஷ்புவும் ஒற்றைபாடலுக்கு ஆட பிரமாண்ட பேய் படமாக சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது அரண்மனை - 2. கதைப்படி, ஜமீன்தார் ராதாரவி, அவரது மூத்த மகன் சுப்புபஞ்சு, இளைய மகன் சித்தார்த், சித்தார்த்துக்கும் முறைப்பெண் த்ரிஷாவுக்கும் திருமணம் பேசி முடித்து, அது நடக்க இருக்கும் சூழலில் ஜமீனுக்குள் கிராபிக்ஸ் புண்ணியத்தில் மிகவும் பிரமாண்டமான கெட்ட சக்தி ஒன்று புகுந்து, ஜமீன் ராதாரவியை படுத்த படுக்கையாக்கிறது. சித்தார்த்தை அவர், செய்யாத கொலைக்காக போலீஸ் லாக்-அப் பில் தள்ளுகிறது, சுப்பு பஞ்சுவின் மகனை தண்ணீருக்குள் தள்ளி மூழ்கடிக்கிறது, சுப்புவையும், ஜமீனின் டிரைவர் ராஜ் கபூரையும் தீர்த்து கட்டுகிறது. இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் யார்.?, ஜமீன் குடும்பம் அத்தனை பிரச்சனையில் இருந்தும் தப்பி பிழைத்ததா.?, இப்பட இயக்குனரும், இப்பட கேரக்டர் படி த்ரிஷாவின் அண்ணனுமான சுந்தர்.சி., ஜமீன் குடும்பம் பிரச்சினைகளில் இருந்து மீள எவ்வாறு உதவுகிறார்?, இப்படத்தில் சூரியின் ரோல் என்ன?, ஹன்சிகா யார்..? என்பது உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு மிரட்டலாக பதில் சொல்ல முயன்று, அதில் பாதி வெற்றியும், மீதி தோல்வியும் கண்டிருக்கிறது அரண்மனை-2 படத்தின் மீதிக்கதை சுந்தர்.சி இயக்கத்தில், அரண்மனை தந்த வெற்றி, அரண்மனை-2விலும் அதே சாயலை? தரும்படி காட்சிப்படுத்தப்பட்டிருப்பது பலமா?, பலவீனமா..? இயக்குனருக்கே வெளிச்சம் கதாநாயகர்களாக சுந்தர்.சி, சித்தார்த் இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். இவர்கள் இருவரைக் காட்டிலும் காமெடி ஹீரோவாக சூரி ஜெயித்திருக்கிறார். செட்டப் பண்ணலாமுன்னு பார்த்தா இந்த கெட்அப் கெடுத்துடுச்சே.., தேனே கையில் தானா வந்து விழும் போது நக்கிடணும் எல்லோரும் பேய பார்த்தா ஒண்ணுக்கு போவாங்க, உன் தங்கச்சி பேய் கூடவே ஒண்ணுக்கு போறாளே. என்பது உள்ளிட்ட சூரியின் டைமிங் டயலாக்குகள் தியேட்டரை விட்டு வந்த பின்னும் கிச்சு கிச்சு சிரிப்பு கிளப்பும் ரகம். இதுவே இப்படத்தின் பெரும் பலம் சிறப்பு தோற்றத்தில் ஹன்சிகாவின் ஆத்துக்காரராக வைபவ் ஐயோ பாவம் (ஆமாம், பழி வாங்கும் பேய்கள் பெரும்பாலும் பெண் பேய்களாகவே இருக்கும் ரகசியம் என்ன? ஏன், வைபவின் ஆவி ஹன்சிகாவின் ஆத்மாவுடன் சேர்ந்து பழிவாங்கத் துடிக்கவில்லை.பேய் கதாநாயகியாக ஹன்சிகா பின்பாதியில் பீதியூட்டுகிறார். த்ரிஷா, முன் பாதியில் ஆவி, பேய் மிரட்சியுடனும், பின் பாதியில் ஹன்சின் ஆவியை உடம்பில் தாங்கி மிரட்டலாகவும் நடித்திருக்கிறார். இவர்களைக்காட்டிலும் கவருகிறார் சேச்சி உதவியாளராக வரும் பூனம் பாஜ்வா. குளோசப்பில் கோவைசரளா, சூரியிடம் மிதி வாங்கியும் எழுந்திருக்காது படுத்த படுக்கையாய் ராதாரவி, மாந்தரீகர் ஆடுகளம் ஜெயபாலன், அவர் உதவி தளபதி தினேஷ் உள்ளிட்டோர்... சித்ரா லட்சுமணன், ராஜ் கபூர், சுப்புபஞ்சு, கெளதம், இயக்குனர் சு.சியின் ஆஸ்தான விச்சு, வினோதினி உள்ளிட்ட எல்லோரும் பிரமாண்ட கிராபிக்ஸ் பேயைக் காட்டிலும் குளோசப்பில் அடிக்கடி வந்து பயமுறுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக கோவை சரளாவின் குளோஸப்பும், க்ளைமாக்ஸில் குஷ்புவின் சாமிபாட்டு பேயாட்டமும், ரொம்பவே பயமுறுத்துகின்றன. ஹிப் ஆப் தமிழாவின் இசையில் குச்சிமிட்டாய் குருவிரொட்டி.... , போறாடா அவ போறாடா... என்னோட ஆசைய மண்ணுக்குள்ள வீசிப் புட்டு... பாடல்கள் படத்திற்கு பலம் சேர்த்தாலும், குஷ்பு ஆடும் பாடல் உள்ளிட்ட புரியாத வார்த்தை பாடல்கள் ரசிகனை கதற விடுவது கொடூரம்! யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு க்ராபிக்ஸ், சி.ஜி உதவியில் மேலும் ஜொலித்திருப்பதும், ஆவி பேய்களுக்கான புதுவித க்ராபிக்ஸும் குழந்தைகளைக் கவரும்... பாவம் . பெரியவர்கள். படத்தொகுப்பாளர், என்.பி.ஸ்ரீகாந்த் எங்கு போனார்.? என்ன செய்தார்..?என்பது கேள்விக்குறி. அரண்மனையில் நடித்த ஹன்சிகா, சுந்தர்.சி, கோவை சரளா உள்ளிட்டோருடன் சித்தார்த் - த்ரிஷா, வைபவ், சூரி, பூனம் பஜ்வா உள்ளிட்டவர்களை புதிதாக இணைத்துக் கொண்டு பிரமாண்டமான பேய் படமாக மிரட்டலாக, கூடவே காமெடி படமாகவும் கலக்கலாக, கலர்புல்லாக சுந்தர்.சியின் இயக்கத்தில் இப்படம் வந்திருப்பது அரண்மனை - 2 வின் சிறப்பு.ஆனால், சுந்தர்.சியின் எழுத்து, இயக்கத்தில்அரண்மனை-2வை திரையில் பார்க்கும் போதும் அரண்மனையையே மீண்டும் பார்ப்பது போன்ற ப்ரம்மை வருகிறது
அரண்மனை 2 விமர்சனம்
January 30, 2016
0
பிள்ளைதாச்சி மகளையும், அவளது புருஷனையும் ஜாதி கௌரவத்திற்காக துடிக்க, துடிக்க கொல்லும் ஜமீனையும், அவரது வாரிசுகளையும்... பழி தீர்க்க களம் இறங்கும் ஜமீன் மகளின் ஆத்மா சாந்தி அடைந்ததா.?, இல்லையா..? என்பது தான் அரண்மனன - 2 திரைப்படம். கதாநாயகர்ளாக சுந்தர்.சி, சித்தார்த், சூரி வைபவ் (கெஸ்ட் ரோல்) உள்ளிட்டோர் நடிக்க, கதாநாயகியர் த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா உள்ளிட்டோருடன் இப்படத் தயாரிப்பாளர் குஷ்புவும் ஒற்றைபாடலுக்கு ஆட பிரமாண்ட பேய் படமாக சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது அரண்மனை - 2. கதைப்படி, ஜமீன்தார் ராதாரவி, அவரது மூத்த மகன் சுப்புபஞ்சு, இளைய மகன் சித்தார்த், சித்தார்த்துக்கும் முறைப்பெண் த்ரிஷாவுக்கும் திருமணம் பேசி முடித்து, அது நடக்க இருக்கும் சூழலில் ஜமீனுக்குள் கிராபிக்ஸ் புண்ணியத்தில் மிகவும் பிரமாண்டமான கெட்ட சக்தி ஒன்று புகுந்து, ஜமீன் ராதாரவியை படுத்த படுக்கையாக்கிறது. சித்தார்த்தை அவர், செய்யாத கொலைக்காக போலீஸ் லாக்-அப் பில் தள்ளுகிறது, சுப்பு பஞ்சுவின் மகனை தண்ணீருக்குள் தள்ளி மூழ்கடிக்கிறது, சுப்புவையும், ஜமீனின் டிரைவர் ராஜ் கபூரையும் தீர்த்து கட்டுகிறது. இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் யார்.?, ஜமீன் குடும்பம் அத்தனை பிரச்சனையில் இருந்தும் தப்பி பிழைத்ததா.?, இப்பட இயக்குனரும், இப்பட கேரக்டர் படி த்ரிஷாவின் அண்ணனுமான சுந்தர்.சி., ஜமீன் குடும்பம் பிரச்சினைகளில் இருந்து மீள எவ்வாறு உதவுகிறார்?, இப்படத்தில் சூரியின் ரோல் என்ன?, ஹன்சிகா யார்..? என்பது உள்ளிட்ட இன்னும் பல கேள்விகளுக்கு மிரட்டலாக பதில் சொல்ல முயன்று, அதில் பாதி வெற்றியும், மீதி தோல்வியும் கண்டிருக்கிறது அரண்மனை-2 படத்தின் மீதிக்கதை சுந்தர்.சி இயக்கத்தில், அரண்மனை தந்த வெற்றி, அரண்மனை-2விலும் அதே சாயலை? தரும்படி காட்சிப்படுத்தப்பட்டிருப்பது பலமா?, பலவீனமா..? இயக்குனருக்கே வெளிச்சம் கதாநாயகர்களாக சுந்தர்.சி, சித்தார்த் இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கின்றனர். இவர்கள் இருவரைக் காட்டிலும் காமெடி ஹீரோவாக சூரி ஜெயித்திருக்கிறார். செட்டப் பண்ணலாமுன்னு பார்த்தா இந்த கெட்அப் கெடுத்துடுச்சே.., தேனே கையில் தானா வந்து விழும் போது நக்கிடணும் எல்லோரும் பேய பார்த்தா ஒண்ணுக்கு போவாங்க, உன் தங்கச்சி பேய் கூடவே ஒண்ணுக்கு போறாளே. என்பது உள்ளிட்ட சூரியின் டைமிங் டயலாக்குகள் தியேட்டரை விட்டு வந்த பின்னும் கிச்சு கிச்சு சிரிப்பு கிளப்பும் ரகம். இதுவே இப்படத்தின் பெரும் பலம் சிறப்பு தோற்றத்தில் ஹன்சிகாவின் ஆத்துக்காரராக வைபவ் ஐயோ பாவம் (ஆமாம், பழி வாங்கும் பேய்கள் பெரும்பாலும் பெண் பேய்களாகவே இருக்கும் ரகசியம் என்ன? ஏன், வைபவின் ஆவி ஹன்சிகாவின் ஆத்மாவுடன் சேர்ந்து பழிவாங்கத் துடிக்கவில்லை.பேய் கதாநாயகியாக ஹன்சிகா பின்பாதியில் பீதியூட்டுகிறார். த்ரிஷா, முன் பாதியில் ஆவி, பேய் மிரட்சியுடனும், பின் பாதியில் ஹன்சின் ஆவியை உடம்பில் தாங்கி மிரட்டலாகவும் நடித்திருக்கிறார். இவர்களைக்காட்டிலும் கவருகிறார் சேச்சி உதவியாளராக வரும் பூனம் பாஜ்வா. குளோசப்பில் கோவைசரளா, சூரியிடம் மிதி வாங்கியும் எழுந்திருக்காது படுத்த படுக்கையாய் ராதாரவி, மாந்தரீகர் ஆடுகளம் ஜெயபாலன், அவர் உதவி தளபதி தினேஷ் உள்ளிட்டோர்... சித்ரா லட்சுமணன், ராஜ் கபூர், சுப்புபஞ்சு, கெளதம், இயக்குனர் சு.சியின் ஆஸ்தான விச்சு, வினோதினி உள்ளிட்ட எல்லோரும் பிரமாண்ட கிராபிக்ஸ் பேயைக் காட்டிலும் குளோசப்பில் அடிக்கடி வந்து பயமுறுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக கோவை சரளாவின் குளோஸப்பும், க்ளைமாக்ஸில் குஷ்புவின் சாமிபாட்டு பேயாட்டமும், ரொம்பவே பயமுறுத்துகின்றன. ஹிப் ஆப் தமிழாவின் இசையில் குச்சிமிட்டாய் குருவிரொட்டி.... , போறாடா அவ போறாடா... என்னோட ஆசைய மண்ணுக்குள்ள வீசிப் புட்டு... பாடல்கள் படத்திற்கு பலம் சேர்த்தாலும், குஷ்பு ஆடும் பாடல் உள்ளிட்ட புரியாத வார்த்தை பாடல்கள் ரசிகனை கதற விடுவது கொடூரம்! யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு க்ராபிக்ஸ், சி.ஜி உதவியில் மேலும் ஜொலித்திருப்பதும், ஆவி பேய்களுக்கான புதுவித க்ராபிக்ஸும் குழந்தைகளைக் கவரும்... பாவம் . பெரியவர்கள். படத்தொகுப்பாளர், என்.பி.ஸ்ரீகாந்த் எங்கு போனார்.? என்ன செய்தார்..?என்பது கேள்விக்குறி. அரண்மனையில் நடித்த ஹன்சிகா, சுந்தர்.சி, கோவை சரளா உள்ளிட்டோருடன் சித்தார்த் - த்ரிஷா, வைபவ், சூரி, பூனம் பஜ்வா உள்ளிட்டவர்களை புதிதாக இணைத்துக் கொண்டு பிரமாண்டமான பேய் படமாக மிரட்டலாக, கூடவே காமெடி படமாகவும் கலக்கலாக, கலர்புல்லாக சுந்தர்.சியின் இயக்கத்தில் இப்படம் வந்திருப்பது அரண்மனை - 2 வின் சிறப்பு.ஆனால், சுந்தர்.சியின் எழுத்து, இயக்கத்தில்அரண்மனை-2வை திரையில் பார்க்கும் போதும் அரண்மனையையே மீண்டும் பார்ப்பது போன்ற ப்ரம்மை வருகிறது
Tags
Post a Comment
0 Comments