பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி மற்றும் பலர் படித்துள்ள இது நம்ம ஆளு படம் ஒரு வருடப் போராட்டத்திற்குப் பிறகு அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு பிப்ரவரி 3ம் தேதியன்று நடைபெற உள்ளது. கடந்த வாரம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ், படத்தின் பிரமோஷன்களுக்கு நயன்தாரா கண்டிப்பாக வருவார் என்று சொன்னார். ஆனால், நடக்கும் விஷயங்களைப் பார்த்தால் நயன்தாரா இனி இந்தப் படத்தைப் பற்றி தப்பித் தவறிக் கூட பேச மாட்டார் என்றே தோன்றுகிறது. கடந்த சில நாட்களாக இப்படத்தின் இசை வெளியீட்டிற்கான விளம்பரங்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், அவற்றில் படத்தின் நாயகியான நயன்தாரா இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்துள்ள ஆன்ட்ரியா தான் இடம் பெற்று வருகிறார். அதோடு, படத்தை விளம்பர டிசைன்களில் டிஆரின் குடும்பப் படம் என்பதை தனி கவனத்துடன் வெளியிட்டு வருகிறார்கள். நேற்று வரை சிம்பு WIN என விளம்பரப்படுத்தியவர்கள் இன்று சிம்பு IN என மாற்றிவிட்டார்கள். ஒருவேளை அவர்களே சிம்புவுக்கு வெற்றி கிடைக்குமோ கிடைக்காதோ என்று சந்தேகப்பட்டுவிட்டார்களோ தெரியவில்லை. அது மட்டுமல்லாமல் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் குறளரசனின் புகைப்படத்தையும், ஒரு லோகாவாக உருவாக்கி அதில் இடம் பெற வைத்திருக்கிறார்கள். இளையராஜா, ரகுமான் இசையமைக்கும் படங்களுக்குக் கூட யாரும் அப்படிச் செய்ய மாட்டார்கள். நாளைய விளம்பரத்திலாவது நயன்தாரா இடம் பெறுவாரா அல்லது நயன்தாராவை முற்றிலுமாக அவர்களே புறக்கணிக்கிறார்களா என்பதற்கு படத்தின் இயக்குனரான பாண்டிராஜ் தான் பதில் சொல்லியாக வேண்டும். அவர்தானே, படத்தின் பிரமோஷனுக்கு நயன்தாரா கண்டிப்பாக வருவார் என்று சொன்னது. இப்போது இந்த டிசைன்கள் கூட அவர் அனுமதியில்லாமல்தான் வெளியாவதாகவும், சிம்பு தான் இதை டிசைன் செய்கிறார் என்றும் சொல்கிறார்கள். அதானே, சிம்புவாவது மாறுவதாவது
இசை வெளியீடு நயன்தாரா புறக்கணிப்பு
January 30, 2016
0
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி மற்றும் பலர் படித்துள்ள இது நம்ம ஆளு படம் ஒரு வருடப் போராட்டத்திற்குப் பிறகு அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு பிப்ரவரி 3ம் தேதியன்று நடைபெற உள்ளது. கடந்த வாரம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ், படத்தின் பிரமோஷன்களுக்கு நயன்தாரா கண்டிப்பாக வருவார் என்று சொன்னார். ஆனால், நடக்கும் விஷயங்களைப் பார்த்தால் நயன்தாரா இனி இந்தப் படத்தைப் பற்றி தப்பித் தவறிக் கூட பேச மாட்டார் என்றே தோன்றுகிறது. கடந்த சில நாட்களாக இப்படத்தின் இசை வெளியீட்டிற்கான விளம்பரங்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், அவற்றில் படத்தின் நாயகியான நயன்தாரா இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்துள்ள ஆன்ட்ரியா தான் இடம் பெற்று வருகிறார். அதோடு, படத்தை விளம்பர டிசைன்களில் டிஆரின் குடும்பப் படம் என்பதை தனி கவனத்துடன் வெளியிட்டு வருகிறார்கள். நேற்று வரை சிம்பு WIN என விளம்பரப்படுத்தியவர்கள் இன்று சிம்பு IN என மாற்றிவிட்டார்கள். ஒருவேளை அவர்களே சிம்புவுக்கு வெற்றி கிடைக்குமோ கிடைக்காதோ என்று சந்தேகப்பட்டுவிட்டார்களோ தெரியவில்லை. அது மட்டுமல்லாமல் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் குறளரசனின் புகைப்படத்தையும், ஒரு லோகாவாக உருவாக்கி அதில் இடம் பெற வைத்திருக்கிறார்கள். இளையராஜா, ரகுமான் இசையமைக்கும் படங்களுக்குக் கூட யாரும் அப்படிச் செய்ய மாட்டார்கள். நாளைய விளம்பரத்திலாவது நயன்தாரா இடம் பெறுவாரா அல்லது நயன்தாராவை முற்றிலுமாக அவர்களே புறக்கணிக்கிறார்களா என்பதற்கு படத்தின் இயக்குனரான பாண்டிராஜ் தான் பதில் சொல்லியாக வேண்டும். அவர்தானே, படத்தின் பிரமோஷனுக்கு நயன்தாரா கண்டிப்பாக வருவார் என்று சொன்னது. இப்போது இந்த டிசைன்கள் கூட அவர் அனுமதியில்லாமல்தான் வெளியாவதாகவும், சிம்பு தான் இதை டிசைன் செய்கிறார் என்றும் சொல்கிறார்கள். அதானே, சிம்புவாவது மாறுவதாவது
Tags
Post a Comment
0 Comments