Type Here to Get Search Results !

நட்சத்திரங்களை சுற்றும் துருவ நட்சத்திரம்





இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்குப் பிடிக்காத வார்த்தை கதை சொல்லுங்க என்பதுதான். அவரது படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் ஹீரோக்கள், கால்ஷீட் கொடுப்பதற்கு முன் கௌதம் மேனனிடம் கதை சொல்லுங்க என்று கேட்டால் மனுஷன் டென்ஷனாகிவிடுவார். காரணம்... கதையை அவரால் கோர்வையாக சொல்ல முடியாது என்பது மட்டுமல்ல, படப்பிடிப்பு தொடங்கும்வரை படத்தின் முழுக்கதையை அவர் தீர்மானித்திருக்கவே மாட்டார்.இதன் காரணமாகவே சூர்யா, விஜய் தொடங்கி பல ஹீரோக்கள்  கௌதம் மேனனுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டு பிறகு பின்வாங்கியுள்ளனர். முழுக்கதையையும்  சொல்லாமல் முதலில் படத்துக்கான அவுட்லைனையும் தலைப்பையும் மட்டும் சொல்லிவிடுவார். இப்படி கௌதம் மேனன் சொல்லிவந்த கதைகளில் ஒன்றுதான் - துருவ நட்சத்திரம். இந்தக் கதையில் முதலில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. கடைசிவரை கௌதம் முழுக்கதையை சொல்லாததினால் சூர்யா விலகினார். பிறகு அந்தக்கதையை விஜய்யிடம் சொன்னார் கௌதம் மேனன். அவரும் அதில் நடிக்க மறுத்துவிட்டார். பிறகு அஜித்திடம் சொன்னார். அவரும் மறுத்துவிட்டு வேறு கதை சொல்லும்படி சொல்ல, அதுதான் என்னை அறிந்தால். இப்படியாக பல ஹீரோக்கள் நிராகரித்த துருவ நட்சத்திரம் கதையை தற்போது ஜெயம்ரவியிடம் அணுகியிருக்கிறார் கௌதம் மேனன்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad