இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி மெல்போர்னில் நேற்று நடைபெற்றது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 33 பந்துகளில் 59 ரன்கள் விளாசிய இந்திய அணியின் வீராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், இரவில் வெளிச்சம் இல்லாமலும் வீராட் கோலி பேட்டிங் செய்வார் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:-
கோலி அற்புதமான பாமில் இருக்கிறார். வீரர்களின் கனவு ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இரவில் வெளிச்சம் இல்லாமலும் கோலியால் பேட்டிங் செய்ய முடியும். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் அவரை அவுட் ஆக்க முடியவில்லை. கோலி தவறு செய்யும் வரை அவர்கள் காத்திருக்கிறார்கள். யுவராஜ் சிங் 3-வது இடத்தில் களமிறங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்:- இந்திய அணி டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வெல்ல வேண்டும் என விரும்புகிறேன். கோலி தொடர்ந்து 3-ம் இடத்தில் விளையாட வேண்டும். இதில் இடம் எதனையும் மாற்ற வேண்டாம். யுவராஜ் ஆசிய கோப்பை, உலகக் கோப்பையில் விளையாட முடியும். இந்தியா முழுமையாக தொடரை வெல்ல வேண்டும்.
Post a Comment
0 Comments