Type Here to Get Search Results !

பிரேசிலில் ஒலிம்பிக்ஸ் மிரட்டும் ஜிகா வைரஸ்




பிரேசிலில் வேகமாக பரவி வரும் ஜிகா வைரஸ் காரணமாக அந்நாட்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரேசிலில் ரியோ டி ஜெனிரொ நகரில் வரும் ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்கவுள்ளன.  இன்னும் 6 மாதங்களே இருப்பதால் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமான நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில் அந்நாட்டில் பரவி வரும் ஜிகா வைரஸ் விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்த வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காததால், இதனை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.  ஆனால் வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலக நாடுகளுக்கு மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.  இதற்கிடையில் ரஷ்யாவும் அவுஸ்திரேலியாவும் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் பெண்களின் நலன் குறித்து அச்சம் தெரிவித்துள்ளன.  ஒரு சில நாடுகளும் தங்கள் நாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளன.  இந்நிலையில் பெரும்பாலான விமான நிறுவனங்களும் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு செல்ல முன்பதிவு செய்திருந்தவர்கள் தங்களின் டிக்கெட்டை கேன்சல் ரத்து செய்தால் பணத்தை திரும்ப தருவதாகவும் தெரிவித்துள்ளன.  இதனால் பிரேசிலுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் காரணமாக பார்வையாளர்களின் எண்ணிக்கை பெருமளவு சரிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில் கொசுக்களை ஒழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்குள் வைரஸ் கட்டுக்குள் வைக்கப்படும் என்றும் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad