உலகளவில் அதிக மக்களால் பார்க்கப்படும் விளையாட்டாக கால்பந்தாட்டம் விளங்கி வருகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற பேதமில்லாமல் பலரும் கால்பந்தாட்ட விளையாட்டு மீது தங்கள் உயிரையே வைத்துள்ளனர். இதன் காரணமாக ஹொலிவுட் நடிகர்களை விட கால்பந்தாட்ட வீரர்களுக்கு ரசிகர்கள் அதிகம். ஒரு காலத்திலே பிரிட்டனின் டேவிட் பெக்காமுக்கு இப்படிப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். தற்போது கிரிஸ்டியானோ ரொனால்டோ, லியானல் மெஸ்ஸி, நெய்மர் ஆகியோர் உலக புகழ்பெற்ற வீரர்களாக திகழ்ந்துவந்தாலும், உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை பெற்று இருப்பவர் மெஸ்ஸி மட்டுமே ரசிகர்கள் என்றால் சாதாரண ரசிகர்கள் இல்லை. அவர்களை போலவே உடையணிவது, முடிவெட்டிகொள்வது, என அனைத்திலும் அவர்களை பின்பற்றுபவர்களாக இருப்பவர்கள். அவர்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுள்ளான் மெஸ்ஸியின் ரசிகரான 5 வயது சிறுவன் ஒருவன்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகேயுள்ள ஜஹோரியை சேர்ந்தவன் முர்டாஸா அஹ்மதி. 5 வயது சிறுவனான இவர் மெஸ்ஸியின் தீவிர ரசிகர். இரவில் தூங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென தூக்கத்தில் இருந்து விழிக்கும் அஹ்மதி, மெஸ்ஸியிடம் செல்ல வேண்டும் என்று அழுவானாம். இந்நிலையில் ஒருநாள் தன் தந்தை ஆரிஃப் அகமதியிடம் தனக்கு மெஸ்ஸி அணிவது போன்ற பனியன் வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்துள்ளான். அவரது தந்தையோ, நாம் நகரத்தில் இருந்து மிகவும் தொலைவில் உள்ள குக்கிராமத்தில் இருக்கிறோம். எனவே பனியன் வாங்க வழியில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த சிறுவன் தொடர்ந்து அழுதபடி இருந்துள்ளான். இதையடுத்து முர்டாஸாவை சமாதானப்படுத்த அவரது சகோதரர் ஒரு யோசனை செய்தார். அதன்படி அர்ஜெண்டீனா உதைப்பந்தாட்ட அணியின் உடையை போன்றுள்ள ஒரு பிளாஸ்டிக் பையில் மெஸ்சியின் பெயரையும் அவரது எண்ணான 10 என்பதையும் வரைந்து அணிய கொடுத்துள்ளார்.அதைபார்த்ததும் மகிழ்ச்சியடைந்த முர்டாஸா எப்போதும் அந்த பிளாஸ்டிக் ”ஆடை” அணிந்தப்படியே வலம்வருகிறார். இவரின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த புகழ் குறித்து முர்டாஸா கூறியதாவது, இந்த புகழ் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் மெஸ்ஸியை போன்றே கால்பந்தாட்ட வீரர் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளான். மேலும் மெஸ்ஸியை நேரில் பார்க்கவேண்டும் என்றும் அவன் கூறியுள்ளான்.
இணையத்தை கலக்கிய 5 வயது சிறுவன்
January 30, 2016
0
உலகளவில் அதிக மக்களால் பார்க்கப்படும் விளையாட்டாக கால்பந்தாட்டம் விளங்கி வருகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற பேதமில்லாமல் பலரும் கால்பந்தாட்ட விளையாட்டு மீது தங்கள் உயிரையே வைத்துள்ளனர். இதன் காரணமாக ஹொலிவுட் நடிகர்களை விட கால்பந்தாட்ட வீரர்களுக்கு ரசிகர்கள் அதிகம். ஒரு காலத்திலே பிரிட்டனின் டேவிட் பெக்காமுக்கு இப்படிப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். தற்போது கிரிஸ்டியானோ ரொனால்டோ, லியானல் மெஸ்ஸி, நெய்மர் ஆகியோர் உலக புகழ்பெற்ற வீரர்களாக திகழ்ந்துவந்தாலும், உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை பெற்று இருப்பவர் மெஸ்ஸி மட்டுமே ரசிகர்கள் என்றால் சாதாரண ரசிகர்கள் இல்லை. அவர்களை போலவே உடையணிவது, முடிவெட்டிகொள்வது, என அனைத்திலும் அவர்களை பின்பற்றுபவர்களாக இருப்பவர்கள். அவர்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டுள்ளான் மெஸ்ஸியின் ரசிகரான 5 வயது சிறுவன் ஒருவன்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகேயுள்ள ஜஹோரியை சேர்ந்தவன் முர்டாஸா அஹ்மதி. 5 வயது சிறுவனான இவர் மெஸ்ஸியின் தீவிர ரசிகர். இரவில் தூங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென தூக்கத்தில் இருந்து விழிக்கும் அஹ்மதி, மெஸ்ஸியிடம் செல்ல வேண்டும் என்று அழுவானாம். இந்நிலையில் ஒருநாள் தன் தந்தை ஆரிஃப் அகமதியிடம் தனக்கு மெஸ்ஸி அணிவது போன்ற பனியன் வேண்டும் என்று கேட்டு அடம்பிடித்துள்ளான். அவரது தந்தையோ, நாம் நகரத்தில் இருந்து மிகவும் தொலைவில் உள்ள குக்கிராமத்தில் இருக்கிறோம். எனவே பனியன் வாங்க வழியில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த சிறுவன் தொடர்ந்து அழுதபடி இருந்துள்ளான். இதையடுத்து முர்டாஸாவை சமாதானப்படுத்த அவரது சகோதரர் ஒரு யோசனை செய்தார். அதன்படி அர்ஜெண்டீனா உதைப்பந்தாட்ட அணியின் உடையை போன்றுள்ள ஒரு பிளாஸ்டிக் பையில் மெஸ்சியின் பெயரையும் அவரது எண்ணான 10 என்பதையும் வரைந்து அணிய கொடுத்துள்ளார்.அதைபார்த்ததும் மகிழ்ச்சியடைந்த முர்டாஸா எப்போதும் அந்த பிளாஸ்டிக் ”ஆடை” அணிந்தப்படியே வலம்வருகிறார். இவரின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த புகழ் குறித்து முர்டாஸா கூறியதாவது, இந்த புகழ் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் மெஸ்ஸியை போன்றே கால்பந்தாட்ட வீரர் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளான். மேலும் மெஸ்ஸியை நேரில் பார்க்கவேண்டும் என்றும் அவன் கூறியுள்ளான்.
Tags
Post a Comment
0 Comments