தமிழ்த் திரையுலகத்தில் ஸ்பூஃப் வகைப் படங்கள் வெளிவருவது மிக மிகக் குறைவு. அப்படி ஒரு படமாக ஆறு வருடங்களுக்கு முன்பு வந்த படம் தமிழ்ப் படம் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் கண்ணன் இசையமைப்பில் மிர்ச்சி சிவா, திஷா பாண்டே, பரவை முனியம்மா மற்றும் பலர் நடித்திருந்தனர்.<p>தமிழ் சினிமாவில் அதற்கு முன் வந்த பல சூப்பர் ஹிட் படங்களின் காட்சிகளை வைத்தே ஒரு முழு படத்தையும் ஆரம்பம் முதல் கடைசி வரை சிரிக்க வைத்து ரசிகர்களை கொள்ளை கொண்ட படம். மனோபாலா, வெண்ணிற ஆடை மூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் என வித்தியாசமான நண்பர்கள் கூட்டணியில் அந்த மதில் சுவர் காமெடி காட்சிகள் அனைத்துமே மறக்க முடியாத காட்சிகள். படம்தான் ஸ்பூஃப் வகை என்றால் படத்தில் ஒரு பாடலையும் அதே பாணியில் உருவாக்கியிருந்தார் இசையமைப்பாளர் கண்ணன். ஓ மகசியா...என்ற அந்தப் பாடலும் அப்போது தொலைக்காட்சிகளில் அதிகம் ஒளிபரப்பான பாடல். அதிகம் நடிக்க வராத சிவாவிற்கு அவரது அந்த நடிப்பே இந்தப் படத்திற்கும் கை கொடுத்தது. படத்தை இயக்கிய சி.எஸ்.அமுதன் அடுத்து ரெண்டாவது படம் என்ற ஒரு படத்தை இயக்கி முடித்து பல ஆண்டுகளாகியும் இன்னும் அந்தப் படத்தை வெளியிடாமலே இருக்கிறார். தமிழ்ப் படங்களில் இந்த தமிழ்ப் படம் ஒரு மறக்க முடியாத படம்தான்
7வது ஆண்டில் தமிழ்ப் படம்
January 30, 2016
0
தமிழ்த் திரையுலகத்தில் ஸ்பூஃப் வகைப் படங்கள் வெளிவருவது மிக மிகக் குறைவு. அப்படி ஒரு படமாக ஆறு வருடங்களுக்கு முன்பு வந்த படம் தமிழ்ப் படம் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் கண்ணன் இசையமைப்பில் மிர்ச்சி சிவா, திஷா பாண்டே, பரவை முனியம்மா மற்றும் பலர் நடித்திருந்தனர்.<p>தமிழ் சினிமாவில் அதற்கு முன் வந்த பல சூப்பர் ஹிட் படங்களின் காட்சிகளை வைத்தே ஒரு முழு படத்தையும் ஆரம்பம் முதல் கடைசி வரை சிரிக்க வைத்து ரசிகர்களை கொள்ளை கொண்ட படம். மனோபாலா, வெண்ணிற ஆடை மூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் என வித்தியாசமான நண்பர்கள் கூட்டணியில் அந்த மதில் சுவர் காமெடி காட்சிகள் அனைத்துமே மறக்க முடியாத காட்சிகள். படம்தான் ஸ்பூஃப் வகை என்றால் படத்தில் ஒரு பாடலையும் அதே பாணியில் உருவாக்கியிருந்தார் இசையமைப்பாளர் கண்ணன். ஓ மகசியா...என்ற அந்தப் பாடலும் அப்போது தொலைக்காட்சிகளில் அதிகம் ஒளிபரப்பான பாடல். அதிகம் நடிக்க வராத சிவாவிற்கு அவரது அந்த நடிப்பே இந்தப் படத்திற்கும் கை கொடுத்தது. படத்தை இயக்கிய சி.எஸ்.அமுதன் அடுத்து ரெண்டாவது படம் என்ற ஒரு படத்தை இயக்கி முடித்து பல ஆண்டுகளாகியும் இன்னும் அந்தப் படத்தை வெளியிடாமலே இருக்கிறார். தமிழ்ப் படங்களில் இந்த தமிழ்ப் படம் ஒரு மறக்க முடியாத படம்தான்
Tags
Post a Comment
0 Comments