Type Here to Get Search Results !

வெள்ள நிவாரணத்திற்கு ரஜினிகாந்த் ரூ.10 லட்சம் நிதியுதவி






தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.  தமிழகத்தில் 2 வாரங்களுக்கும் மேல் கனமழை பெய்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நிவாரண பணிகளில் அரசு தற்போது முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. தமிழக அரசின் வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர்கள் பலர் நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.  இந்த நிதியை நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர் பொன் வண்ணன், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் திரட்டி வருகிறார்கள். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், பிரபு, விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன், சத்தியராஜ், சிபிராஜ் உள்ளிட்டோர் நிவாரண நிதிகளை வழங்கியுள்ளனர். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்ரீராகவேந்திர அறக்கட்டளை மூலம் வெள்ள நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரஜினிகாந்த் எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் நிவாரண நிதி பெயரிலான காசோலையை சேர்த்து அனுப்பியுள்ளார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad