Type Here to Get Search Results !

வசூல் சக்கரவர்த்திகள் மூவரையும் இணைக்கும் வடக்கிந்திய கம்பெனி




மலையாள திரையுலகில் புதிதாக ஒரு வடக்கிந்திய திரைப்பட நிறுவனம் ஒன்று கால் பதிக்க விரும்புகிறதாம்.. அதற்கான பூர்வாங்க வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார்களாம். ஆனால் ஆரம்பமே அசத்தலாக இருக்கவேண்டும் என்பது தான் அவர்களது தாரக மந்திரம் என்பதால் ஏதோ நாமும் வந்தோம், படம் தயாரித்தோம் என இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம். அதற்காக அவர்கள் மேற்கொண்டுள்ள மெகா முயற்சி தான் மலையாள சினிமாவின் வசூல் சக்கரவர்த்திகளான மோகன்லால், பிருத்விராஜ், நிவின்பாலி மூவரையும் ஒரே படத்தில் நடிக்க வைப்பது. ஆச்சர்யமாக இதுவரை வெளியான மலையாள படங்களை பொறுத்தவரை வசூல் ரீதியாக முதலில் நிவின்பாலி (பிரேமம்), அடுத்ததாக மோகன்லால் (த்ரிஷ்யம்), மூன்றாவதாக ப்ருத்விராஜ் (என்னு நிண்டே மொய்தீன்) ஆகிய மூவரும் தான் இருக்கிறார்கள். இவர்களை ஒன்றிணைப்பது சாத்தியமா என்றால், ஆம் என்று உறுதியாக சொல்கிற அளவுக்கு பணத்தை கொட்டியிறைக்க அந்த நிறுவனம் தயாராக உள்ளதாம். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் மலையாள சினிமாவில் இப்படி ஒரு மல்டி ஸ்டாரர் படம் தயாரித்தது தங்கள் நிறுவனம் தான் என்கிற புகழ் தானாம். பிசினஸ் அது ஆட்டோமேட்டிக்காக நடந்துவிடுமாம். அதற்காக வலுவான கதையையும், டேர் டெவில் டைரக்டர் ஒருவரையும் தேடி வலையை வீசியிருக்கிறார்களாம்



.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad