Type Here to Get Search Results !

விடாமல் துரத்தும் தோல்விகள்: வித்தியாசமாக மனசோர்வை போக்கிய தோனி






தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஏற்பட்ட தோல்வியை மறக்க மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் டோனி பொழுதைக் கழித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி 2-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது.  தொடர்ச்சியான தோல்விகளால் துவண்டு கிடக்கும் தோனி  நேற்று மராட்டிய மாநிலம் புனேவில் நடந்த மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கலாச்சார கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.  இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தோனி , அங்கிருந்த குழந்தைகளுடன் சுமார் ஒருமணி நேரம் பேசி மகிழ்ந்து நேரத்தை செலவிட்டார். பின்னர் அவர்களுக்கு பரிசுகளை வழங்கி மகிழ்வித்தார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad