Type Here to Get Search Results !

சென்னையில் சீனிவாசனை சந்தித்த தோனி






ஐசிசி தலைவர் சீனிவாசனை இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் தோனி சென்னையில் சந்தித்து பேசியுள்ளார். ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதனால், அடுத்த இரு ஆண்டுகளுக்கு இந்த அணிகள் ஐபிஎல் தொடரில் பங்கேற்காது என பிசிசிஐ புதிய தலைவர் ஷசாங்க் மனோகர் அறிவித்தார்.  இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவரான டோனி, ஐசிசி தலைவராக உள்ள சீனிவாசனை அவரது அடையாறு இல்லத்தில் 45 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார்.  சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டதால் இவ்விஷயத்தில்  அடுத்து என்ன செய்வது மற்றும் சென்னை அணியின் எதிர்காலம் குறித்து இருவரும் பேசியிருக்கலாம் எனத் தெரிகிறது.  ஆனால் இது தொடர்பாக தோனியிடம்  கேட்ட போது அவர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.  ஆறாவது பிரிமியர் தொடரில் நடந்த சூதாட்ட பிரச்சனை காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியத் (பிசிசிஐ) தலைவராக இருந்த சீனிவாசன் பதவி விலக நேரிட்டது குறிப்பிடத்தக்கது.


  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad