அமெரிக்க ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ள கொரோனாவின் புதிய அறிகுறி... ஜாக்கிரதையா இருங்க...!!!!



உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தன்னுடைய கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் சுமார் 19 மில்லியன் மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா வைரஸின் தாக்கம் குறையவில்லை. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வேலையை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் கோவிட்-19 பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில், கொரோனா வைரஸின் அறிகுறிகளாக சளி, காய்ச்சல், முச்சுதிணறல் ஆகியவற்றை ஏற்கனவே ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், அறிகுறிகளின் பட்டியலில் ஒவ்வொரு ஆய்வின்போதும் ஒரு அறிகுறி சேர்க்கப்படுகிறது. கோவிட்-19 க்கு ஒரு சிகிச்சையை உருவாக்க உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் இரவும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். சரியான நேரத்தில் நோயறிதலுக்கான நோயின் புதிய அறிகுறிகளைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

கோவிட்-19 இன் அசாதாரண அறிகுறிகள்:

காய்ச்சல், வறட்டு இருமல், தொண்டை வலி மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை கோவிட் -19 இன் அறிகுறிகள் ஆகும். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பற்றிய ஆராய்ச்சியில், சில சமயங்களில் முற்றிலும் வினோதமான வழிகளிலும் தன்னை வெளிப்படுத்துகிறது என்பது தெளிவாகிறது. நாவல் கொரோனா வைரஸின் சில மருத்துவ அம்சங்கள் மற்ற சுவாச நோய்களைப் போலவே இருந்தாலும், சுவை மற்றும் வாசனையை இழப்பது (எந்த நாசி நெரிசலும் இல்லாமல்), கண் பிரச்சினைகள், தோல் வெடிப்பு, லேசான இரைப்பை குடல் பிரச்சினைகள் மற்றும் சில நோயாளிகளுக்கு தலைச்சுற்றல் உள்ளிட்ட அசாதாரண அறிகுறிகளையும் இது ஏற்படுத்துகிறது.

ஆய்வு கூறுவது :

உலகெங்கிலும் சுமார் 19 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் நாவல் முழு உடலையும், தலை முதல் கால் வரை, கணிக்க முடியாத மற்றும் இதுவரை பார்த்திராத வழிகளில் பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எமர்ஜென்சி மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு கோவிட்-19 இன் ஒரு புதிய அறிகுறியை சுட்டிக்காட்டுகிறது. இது நோயின் முதல் அறிகுறியாகக் கருதப்படலாம். அவை தொடர்ச்சியான விக்கல்கள்தான்.

தொடர் விக்கல் ஆய்வில், அமெரிக்காவின் குக் கவுண்டி ஹெல்த், மருத்துவர்கள் 62 வயதான ஒரு நபரின் பரிசோதனை அறிக்கையை விரிவாகக் கூறினர். அதில், நான்கு நாட்கள் தொடர்ந்து விக்கல் காரணமாக மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றார். தொடர்ச்சியாக விக்கல்கள் வந்துகொண்டிருந்ததால், அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நோயாளிக்கு நுரையீரல் நோயின் எந்த வரலாறும் இல்லை மற்றும் கடந்த நான்கு மாதங்களில் சுமார் 11 கிலோ எடையை இழந்துவிட்டார், இவ்வித முயற்சியும் இல்லாமல்.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url