Type Here to Get Search Results !

தமிழ்நாட்டில் உச்சம் தொட்ட கொரோனா !!!! இன்றைய நிலவரம் !!!!



தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் தாக்குதல் மிக அதிகமாகியுள்ளது. ஒவ்வொரு நாளும் புதுப்புது உச்சங்களை எட்டிவருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் பாதிப்பு ஏழாயிரத்தை நெருங்கியுள்ளது. சென்னைக்கு அடுத்தப் படியாக செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக பாதிப்பு பதிவாகின்றன. ராணிபேட்டை,விருதுநகர், தூத்துக்குடியிலும் அதிக பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு, பலி, தடுப்பு நடவடிக்கைகள், பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா, விலக்கிக் கொள்ளப்படுமா உள்ளிட்ட முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் இங்கு பார்க்கலாம்

LIVE UPDATE

*தமிழகத்தில் நேற்று மட்டும் 6,986 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 2,13,723 ஆக அதிகரித்துள்ளது.

*சென்னையை பொறுத்தவரை நேற்று மட்டும் 1155 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,695ஆக அதிகரித்துள்ளது.

*நேற்று ஒரே நாளில் மட்டும் 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 3,494 ஆக உயர்ந்துள்ளது.

*நேற்று மட்டும் 5,471 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,56,526 ஆக உயர்ந்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad