Type Here to Get Search Results !

ஜூன் இறுதியில் 1000, இப்போ 10,000... எதற்கும் கலங்காத மதுரை மக்கள் !!!!



மதுரை மாவட்டத்தில் ஜூன் முதல் வாரத்திலிருந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. தரவுகளின்படி திங்கட்கிழமை மட்டும் புதிதாக 249 பேருக்கு தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் பொது முடக்கம் அமலிலிருந்தபோது, மதுரை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் இருந்துள்ளது. அதன்பின் ஊரடங்கு முறையில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை ஜூன் மாத இறுதியில் ஆயிரத்தைக் கடந்தது.

ஜூன் இறுதிவரை ஆயிரம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த சூழலில், இப்போது ஜூலை மாதம் முடிவடைதற்கு முன்பே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இந்த பாதிப்பு எண்ணிக்கையில் முன்னணி கொரோனா போராளிகளான மருத்துவர்கள், செவிலியர்கள், போலீஸ் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது.

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மதுரையில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல் மதுரை ஆத்திக்குளம் சிபிஐ அலுவலகத்தைச் சேர்ந்த சிபிஐ இன்ஸ்பெக்டர் மதுசூதனுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்காக ரயில்வே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மதுரை கொரோனா எண்ணிக்கை 10 ஆயிரத்து 57ஆக உள்ளது. இதில் 7 ஆயிரத்து 809 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். திங்கட்கிழமை ஒரே நாளில் 166 பேர் குணமடைந்தனர். இப்போதைய நேரத்தில் 2 ஆயிரத்து 32 பேர் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே வேளை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 216 ஆக உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad