Type Here to Get Search Results !

மாவட்டத்தில் புதிதாக கொரோனா பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை; தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதி இல்லை; சமூக இடைவெளியை கடைபிடிக்க ரேஷன் கடைக்கு குடையுடன் வந்த பெண்களை பாராட்டிய - கலெக்டர்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
மாவட்டத்தில் புதிதாக கொரோனா பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் 37-வது அமைப்பு தினத்தையொட்டி ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அரசு ஊழியர்கள் ரத்ததானம் செய்தனர். டாக்டர்கள் குழுவினர் ரத்தம் சேகரித்தனர்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செந்தூர் ராஜன், மாவட்ட செயலாளர் முருகன், மாநில துணை தலைவர் வெங்கடேசன், மாவட்ட துணை தலைவர் அண்ணாமலை பரமசிவன், தாசில்தார்கள் செல்வகுமார் (தூத்துக்குடி), ஞானராஜ் (திருச்செந்தூர்) மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் வழிகாட்டுத லின்படி கொரோனா தொற்று பரவமால் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் 27 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 26 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு மூதாட்டி மட்டும் இறந்து உள்ளார். அதன்பிறகு தினசரி சளி, காய்ச்சல் அறிகுறியுடன் உள்ள நபர்கள் கண்டறியப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 நோய் கட்டுப்பாட்டு மண்டலங்கள் இருந்தன. இதில் 5 மண்டலங்களில் 28 நாட்கள் முடிவடைந்ததால், அந்த பகுதிகளில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.

பரிசோதனை

மேலும் வெளி மாநிலம், வெளி மாவட்டத்தில் இருந்து வரும் நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் இருந்து 15 பேர் தூத்துக்குடிக்கு வந்ததாக தகவல் வந்து உள்ளது. இதில் 5 பேர் கண்டறியப்பட்டு வீட்டிலே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இவர்களுக்கு அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஊரடங்கு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள ரத்தம் தேவையான அளவு கிடைக்காமல் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ள அதிகமான ரத்தம் தேவைப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு ரத்ததான முகாம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரத்த வங்கியில் தேவையான ரத்தம் இருப்பில் வைக்க முடியும்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் தன்னார்வலர் மூலம் ரத்தானம் முகாம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று நோயினால் புதிதாக எந்த ஒரு நபரும் பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமூக இடைவெளியை கடைபிடிக்க ரேஷன் கடைக்கு குடையுடன் வந்த பெண்களை பாராட்டிய கலெக்டர்
திருப்பூர் மாநகரில் உள்ள ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து மக்கள் பொருட்களை வாங்குகிறார்களா? என்பதை அறிய கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று காலை ரேஷன் கடைகளுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை சங்கத்தின் கீழ் செயல்படும் எஸ்.வி.காலனி, வெங்கடேஷ் புரம், கருவம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று கலெக்டர் ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு என்னென்ன பொருட்கள் வழங்கப்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்தார்.

அப்போது ரேஷன் கடைகளுக்கு வந்த பொதுமக்கள் குடை பிடித்து வரிசையில் நின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும்போது கொரோனாவை விரட்ட சமூக இடைவெளி அவசியம் என்பதால் பொதுமக்கள் குடையுடன் சென்று வாங்க வேண்டும் என்று கலெக்டர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அவருடைய அறிவிப்பை பின்பற்றி பொதுமக்கள் குடையை பிடித்தபடி நின்றிருந் ததை பார்த்து கலெக்டர் அவர்களை பாராட்டினார்.

இது குறித்து கலெக்டர் கூறியதாவது-

ஊரடங்கு காலத்தில் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் அனைத்துதுறை அதிகாரி களும் ஒருங்கிணைந்து செயல் பட்டு வருகிறார்கள். முதல்- அமைச்சரின் அறிவிப்பு படி ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் அரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர் களில் 7 லட்சத்து 12 ஆயிரத்து 194 ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரண உதவித்தொகை மற்றும் உணவுப்பொருட்கள் கடந்த ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது. இந்த மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் 7 லட்சத்து 57 ஆயிரத்து 206 ரேஷன் கார்டு தாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. கடந்த 4-ந் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகை யில் சமூக இடை வெளியை கடைபிடிக்கும் வகையில் குடையுடன் வெளியே வர வேண்டும். அனைவரும் முககவசம் அணிந்து வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வழங்கல் அதிகாரி முருகன், திருப்பூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் கருணாகரன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதி இல்லை: கலெக்டர் மெகராஜ் அறிவிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் ஊரடங்கில் இருந்து சில கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி காய்கறி மற்றும் மளிகை கடைகளுடன் கூடுதலாக சில கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து இருந்தது.

இது தொடர்பாக கலெக்டர் மெகராஜ் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடி, டீக்கடை, சலூன் மற்றும் அழகுநிலையங்கள், இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகன விற்பனை ஷோரூம், நகைக்கடைகள், குளிர்சாதன வசதியுடன் கூடிய ஜவுளிக்கடைகள் போன்றவற்றை திறக்க அனுமதி இல்லை.

இதேபோல் திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், சுற்றுலா தலங்கள், பூங்கா மற்றும் கூட்ட அரங்குகளை திறக்க கூடாது. தங்கும் விடுதிகள், தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் திறக்க அனுமதி இல்லை. குறிப்பாக தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதி இல்லை. வாடகை கார் மற்றும் ஆட்டோ இயங்க அனுமதி இல்லை.

தடைசெய்யப்பட்ட கடைகளை தவிர மீதமுள்ள கடைகளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறக்கலாம். காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. ஓட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்து இருக்கலாம். பார்சல் மட்டுமே கொடுக்க வேண்டும்.

வணிகர்களும், கடைகளுக்கு வரும் பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். தன் சுத்தத்தை கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad