Type Here to Get Search Results !

கொரோனா பரவல் சென்னையின் நிலை என்ன? 'ஹாட் ஸ்பாட்' ஆன கோடம்பாக்கம்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
கொரோனா பரவல் - சென்னையின் நிலை என்ன?
சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 62.19 சதவீதம் ஆண்கள், 37.75 சதவீதம் பெண்களும், திருநங்கை ஒருவரும் உள்ளனர்.

சென்னையில் திரு.வி.க. நகர், ராயபுரம் மண்டலத்தை தொடர்ந்து கோடம்பாக்கத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

கோயம்பேடு பரவல் காரணமாக கோடம்பாக்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 250ஐ கடந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று கண்டறியப்பட்ட 523 தொற்றுகளில், சென்னையில் 266 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இதுவரை மொத்தம் பாதித்துள்ள 1724 பேரில், 264 பேர் குணமடைந்துள்ளனர். 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் நேற்று அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 58 பேருக்கும், தேனாம்பேட்டையில் 40 பேருக்கும், திரு.வி.க.நகரில் 33 பேருக்கும், ராயபுரத்தில் 24 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


அதேபோல் வளசரவாக்கத்தில் 22 பேரும், தண்டையார்பேட்டையில் 18 பேரும், அடையாறு மற்றும் மாதவரத்தில் தலா 15 பேரும், அண்ணாநகரில் 14 பேரும்,  அம்பத்தூரில் 9 பேரும், திருவொற்றியூரில் 7 பேரும், மணலியில் 5 பேரும், சோழிங்கநல்லூரில் 4 பேரும், பெருங்குடியில் 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆலந்தூரில் புதிய தொற்று கண்டறியப்படவில்லை.

மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:
திரு.வி.க.நகர் மண்டலம் -357

ராயபுரம் மண்டலம்  -299

கோடம்பாக்கம் -257

தேனாம்பேட்டை -206

அண்ணா நகர் -144

தண்டையார்பேட்டை -136

வளசரவாக்கம் -114

அம்பத்தூர் - 67

அடையாறு -44

திருவொற்றியூர் - 29

மாதவரம் -24

பெருங்குடி -12

ஆலந்தூர் -10

மணலி- 10

சோழிங்கநல்லூர் -10

ஆரம்பம் முதலே வட சென்னையில் தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. திரு.வி.க.நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களில் மட்டும் 792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சென்னையில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 45.93 சதவீதமாகும்.

குணமடைந்தவர்கள்
அதேபோல், நேற்று சென்னையில் புதிதாக யாரும் குணமடைந்து வீடு திரும்பவில்லை. சென்னையில் குணமடைந்தோர் சதவீதம் 15.50 ஆக உள்ளது.

வயது வாரியாக பார்க்கையில்
30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 379 பேருக்கும், அதிகபட்சமாக 20 முதல் 29 வயது வரை உள்ள நபர்களில் 408 பேருக்கும், தொற்று உள்ளது. குறைந்தபட்சமாக 9 வயதுக்கு கீழ் 53 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 80 வயதுக்கு மேல் 14 பேரும் பாதித்து உள்ளனர். 10 முதல் 19 வயதுள்ளோர் 167 பேருக்கும்,  40 முதல் 49 வயதுள்ளோர் 319 பேருக்கும், 50 முதல் 59 வயதுள்ளோர் 222 பேருக்கும், 60 முதல் 69 வயதுள்ளோர் 116 பேருக்கும், 70 முதல் 79 வயதுள்ளோர் 42 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

 'ஹாட் ஸ்பாட்' ஆன கோடம்பாக்கம்
அதேபோல், கடந்த சில நாட்களாக கோடம்பாக்கம், அண்ணா நகர், தேனாம்பேட்டை மண்டலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளது. இது சென்னையில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 35.20 சதவீதமாகும்.

கோயம்பேடு பரவலால் கோடம்பாக்கத்தில் கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 58 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

திரு.வி.க.,நகர் மண்டலத்தில் 49 பகுதிகள் கட்டுப்படுத்த பகுதிகளும், ராயபுரத்தில் 54 கட்டுப்பாடுத்தப்பட்ட பகுதிகள் என மொத்தம் சென்னையில் 232 கட்டுப்படுத்தப் பகுதிகளாக மாற்றப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 62.19 சதவீதம் ஆண்கள், 37.75 சதவீதம் பெண்களும், திருநங்கை ஒருவரும் உள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad