Type Here to Get Search Results !

நாகர்கோவில் காசி படம் எடுத்து மிரட்டி இளம்பெண்களிடம் பறித்த பணத்தை கந்துவட்டிக்கு விட்ட கொடூரன்; அதிமுக புள்ளிகள் சிக்குவார்களா? பிறந்தநாள் கேக் வெட்டுவதற்கு காதலர் வராத காரணத்தினால் பெண் போலீஸ் தற்கொலை

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

நாகர்கோவில் காசி ஆபாச படம் எடுத்து மிரட்டி இளம்பெண்களிடம் பறித்த பணத்தை கந்துவட்டிக்கு விட்ட காமக்கொடூரன்
இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து சுருட்டிய பணத்தை நாகர்கோவில் காமக்கொடூரன் காசி கந்துவட்டிக்குவிட்டதுடன் அதற்காக இளைஞர் ஒருவரிடம் ரூ.5.50 லட்சம் மதிப்புள்ள பைக்கை அபகரித்தது தெரியவந்துள்ளது. நாகர்கோவில், கணேசபுரம் ரோட்டை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் காசி(26). இவர் மீது சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், தன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஆபாசமாக படம் எடுத்து ரூ.6.60 லட்சம் பறித்ததுடன் படங்களை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டதாக புகார் கூறியிருந்தார். சென்னை விமான பணிப்பெண் ஒருவரும் காசி மீது புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக கோட்டார் போலீசார் வழக்குப்பதிந்து காசியை கைது செய்தனர்.

இந்தநிலையில் நாகர்கோவில், அலெக்சாந்திரா பிரஸ் ரோட்டை சேர்ந்த வேலண்டைன் மோரீஸ் மகன் டிராவிட்(28) என்பவர் வடசேரி போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார்.அதில், ‘நானும், காசியும் நண்பர்கள். காசியிடம் கடந்த 2018 ஜூன் 6ம் தேதி ₹2 லட்சம் கடன் பெற்றேன். அதற்கு ஈடாக காசோலை மற்றும் எனது விலை உயர்ந்த பைக் (ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750) ஒன்றையும் கொடுத்தேன். பின்னர் வட்டி மற்றும் அசலை கொடுத்துவிட்டேன். ஆனால் காசோலை மற்றும் பைக் ஆகியவற்றை காசி திருப்பி தரவில்லை. பைக்கின் ஆர்.சி புத்தகத்தை தனது பெயருக்கு மாற்றி என்னிடம் நம்பிக்கை மோசடி செய்துவிட்டார்’ என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பாக வடசேரி போலீசார், மோசடி உள்பட 3 பிரிவுகளின்கீழ் காசி மீது ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். காசி மீது இதுவரை 2 பெண்கள் உட்பட மூன்று பேர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து 94981 11103 என்ற செல்போன் எண் அறிவிக்கப்பட்டு, யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம், அவர்கள் பெயர், முகவரி  ரகசியமாக வைக்கப்படும், ஆன்லைனில் புகார் அளித்தால் போதும் என்றும் போலீசார் கூறி வருகின்றனர்.

அதிமுக புள்ளிகள் சிக்குவார்களா?
காசியின் நட்பு வட்டத்தில் கூட்டாளிகளாக அதிமுக புள்ளிகள் சிலரும் உள்ளனர். அதில் ஒரு அதிமுக புள்ளிக்கு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் ஓட்டல்கள், ரிசார்ட்கள் உள்ளன. குமரியில் இருந்து காரில் சென்னை செல்லும் காசி, இளம்பெண்களை இந்த ஓட்டல்களில் தங்க வைத்து மிரட்டி ஆபாச படங்களை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆதாரங்கள் காசியின் லேப்டாப், செல்போன் போன்றவற்றில் போட்டோக்களாகவும், வீடியோக்களாகவும் உள்ளன. இவற்றை வைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிறந்தநாள் கேக் வெட்டுவதற்கு காதலர் வராத காரணத்தினால் பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை
நேற்று மாலை வீட்டில் உள்ள அறையில் பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

பிறந்தநாள் கேக் வெட்டுவதற்கு காதலர் வராத காரணத்தினால் பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இருப்புப்பாதை காவல் நிலைய காவலராக பணியாற்றி வருபவர் சரண்யா. இவர் அயனாவரம் பனந்தோப்பு ரயில்வே காலனி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (30-04-2020) காலை கொரோனா தடுப்பு பணிக்காக பணிபுரிந்து விட்டு மாலை அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

வீட்டுக்குச்சென்றவர்,  அறையில் உள்ள பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சரண்யாவின் தோழி ராஜேஸ்வரி என்பவர் கொடுத்த தகவலின் பேரில் ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் சரண்யா உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சரண்யாவின் காதலரான ஏழுமலை என்பவருக்கு நேற்று பிறந்த நாள் என்பதும், இதனை கொண்டாடுவதற்காக காவலர் சரண்யா வீட்டிற்கு வரும்போது கேக் வாங்கி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், கேக் வெட்டுவதற்கு ஏழுமலை வராததால் மன உளைச்சலுக்கு ஆளான சரண்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீசாரின் முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad