Type Here to Get Search Results !

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் மேலும் 776 பேருக்கு கொரோனா; தமிழக மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம் வெளியீடு

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் 776 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 776 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

சென்னையில் மட்டும் இன்று 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 400 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 7 பேர் இன்று உயிரிழப்பு

தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 94ஆக உயர்வு

சிவகங்கை, ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக பாதிப்பில்லை

வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவோருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகிறது: சுகாதாரத்துறை

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்களில் புதிதாக 13 பேருக்கு இன்று கொரோனா உறுதி

4 ரயில்களில் 3891 பேர் வந்துள்ள நிலையில், இதுவரை 3 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6282ஆக உயர்வு

விமானப்படை விமானம் மூலமாக வந்தவர்களில் இதுவரை 23 பேருக்கு கொரோனா உறுதி

மகாராஷ்டிராவிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் இன்று 76 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை பெருநகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,000ஐ நெருங்கியுள்ளது

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,000ஐ நெருங்கியுள்ளது

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,967ஆக உயர்வு
சென்னையில் 567 பேருக்கு ஒரே நாளில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் பாதிப்பு 8,795 கடந்துள்ளது.  தமிழகத்தில் ஒரே நாளில் 7 பேர் கொரோனா பாதிப்புக்கு பலியான நிலையில், பலி எண்ணிக்கை 94 ஆக உயர்வடைந்து உள்ளது என அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;


தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 13,967- ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750-லிருந்து 1,12,359-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,303-லிருந்து 3,435-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 42,298-லிருந்து 45,300-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 776 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது;

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 6,282 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 400 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 94-ஆக உயர்ந்துள்ளது.

* தமிழகத்தில் 16 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

* 10 விமானங்களில் தமிழகம் வந்த 2,139 பேரில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

*  சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 8,795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* முதலில் கொரோனா பரிசோதனை செய்யும் போது நெகட்டிவ் என வருகிறது. மறுமுறை செய்யும் போது பாசிட்டிவ் வருவதால் சவாலாக உள்ளது. முதலில் நெகட்டிவ் ஆகி பின் வீட்டுக்கு சென்ற 25 பேருக்கு கொரோனா வந்ததால் சவாலாக உள்ளது

* தமிழகத்தில் இதுவரை 3.72 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

*  பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 79 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.67% ஆக உள்ளது.

* மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 66 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 7,219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் தலா 100-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு

* அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

* ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 28 நாட்களாக புதிய தொற்று ஏற்படவில்லை.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 987 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று ஒரே நாளில் 400 பேர் மீண்ட நிலையில் இதுவரை 6,282 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 94-ஆக உயர்ந்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad