தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
அனுமதி பெற்று வந்தாலும் வெளிமாவட்டத்தில் இருந்து வருவோரை தனிமைப்படுத்த வேண்டும் - கலெக்டர் உத்தரவு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் வருகிற 17-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் போலீசார் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
பரமக்குடி அருகேயுள்ள பார்த்திபனூர்-மரிச்சுக்கட்டி சோதனைச்சாவடியில் வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் மருத்துவக்குழுவினரின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே மாவட்டத்தில் இதுவரை 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 11 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.
இந்த நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து அரசு அதிகாரிகளின் அனுமதி பெற்று வாகனங்களில் வருபவர்கள் பார்த்திபனூர் சோதனைச்சாவடியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களை வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார். இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து அனுமதி பெற்று வாகனங்களில் வரும் பலரும் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களிலிருந்து சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, வாணி வழியாக ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வந்துள்ளவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் போலீசார் உதவியுடன் சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். மேலும் அனுமதி பெறாமல் வருபவர்களை போலீசார் மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தி அவர்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
எனவே வெளிமாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வருபவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் அனுமதியுடன் முறையாக வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு வருபவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்தவர்கள் தாமாக தகவல் தெரிவிக்க வேண்டும்: கலெக்டர் ராமன் வேண்டுகோள்
சேலம் மாவட்டத்தில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்தவர்கள் தாமாக முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சென்று வந்திருந்தாலோ, அங்கு பணிபுரிந்து திரும்பிவந்திருந்தாலோ அவர்கள் தாமாக முன்வந்து அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சேலம் மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகள் இவற்றில் ஒன்றுக்கு நேரில் வந்து தங்களது விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
மேலும், இதுகுறித்த விவரங்களை சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட்-19 கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களான 0427-2450498, 2450022, 2450023, 73058 68942 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சென்று வந்தவர்கள் குறித்து தகவல் தெரிவிக்காமல் இருந்தால் அவர்கள் மீது காவல் துறையின் மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் no-n-r-es-i-d-e-ntt-a-m-il.org என்ற இணைய முகப்பில் உள்ள “ Retu-rn to tam-il nadu ” என்ற இணைய படிவம் மூலம் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அனுமதி பெற்று வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருகை தரும் நபர்கள் 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள்.
மத்திய அரசால் நோய்தொற்றின் அளவு மற்றும் தன்மை அடிப்படையில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என வகைப்பாடு செய்யப்பட்டு அந்த பகுதிகளில் உள்ள நோய் தடுப்பு பகுதிகளை தவிர மற்றபகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்குவதற்கும், திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் வாகன அனுமதி சீட்டு பெற தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ள tne-pass.tne-ga.org என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இ-பாஸ் வேண்டி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
தேனி, பெரியகுளம், போடி உள்பட 6 நகரங்களுக்கு எந்த தளர்வும் கிடையாது கலெக்டர் அறிவிப்பு
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கான வழிகாட்டுதல் நடைமுறை படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், ஊரடங்கு உத்தரவு தளர்வு அளிப்பது குறித்து கூறியதாவது:-
தேனி மாவட்டத்தில் கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளான தேனி-அல்லிநகரம், பெரியகுளம், போடி, சின்னமனூர் கம்பம் ஆகிய நகராட்சி பகுதிகள் மற்றும் உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் எந்த ஒரு தளர்வுகளும் இல்லை. இந்த 6 நகர்பகுதிகளிலும் தற்போதைய நடைமுறையே தொடரும். அனுமதியளிக்கப்பட்ட எல்லா பணிகளையும் நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் தொடர்ந்து செயல்படுத்தலாம்.
கடைகள் திறக்கும் நேரம்
இன்று (திங்கட்கிழமை) முதல் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் அரசு கட்டுமான பணிகள், ஏற்றுமதி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். அச்சகங்கள், கட்டுமானப்பொருட்கள் விற்பனையகங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், செல்போன், கணினி, மின்சாதனப் பொருட்கள், மின் மோட்டார், கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம். உணவகங்கள் பார்சல் மட்டுமே வழங்கும் வகையில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம்.
வீட்டு வேலை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கான சிறப்பு உதவியாளர்கள் மற்றும் சுய திறன் பணியாளர்களான பிளம்பர், எலக்ட்ரீசியன், தச்சர் உள்ளிட்டவர்கள் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளலாம்.
தொழிற்சாலைகள்
நகராட்சி பகுதிகளில் கட்டுமான பணிகளை பொறுத்தவரை பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் அல்லது பணியாளர்களை ஒரு முறை மட்டும் வேறு இடத்தில் இருந்து அழைத்து வர அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ளலாம். பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் இதற்கு அனுமதி பெற தேவையில்லை.
தொழிற்சாலைகளை பொறுத்தவரை நகராட்சி பகுதிகளுக்கு அனுமதி இல்லை. பேரூராட்சி பகுதிகளில் ஜவுளித்துறை நிறுவனங்கள் மட்டும் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று செயல்படலாம், ஊராட்சி பகுதிகளில் அனுமதி பெற தேவையில்லை. நூற்பு ஆலைகள் செயல்பட நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அனுமதி இல்லை. ஊராட்சி பகுதிகளில் இயங்கலாம்.
பெருந்தொழிற்சாலைகள் கட்டுமான பணிகளுக்கும், பணிகளை தொடங்கவும், பணியாளர்கள் மற்றும் வாகனங்களுக்கு மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். இதற்கான பணியாளர்களுக்கான வாகனங்களில் 50 சதவீத அளவுக்கு மட்டுமே பணியாளர்களை அழைத்து வர அனுமதி வழங்கப்படும். மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 33 சதவீத பணியாளர்களைக் கொண்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
அனுமதி பெற்று வந்தாலும் வெளிமாவட்டத்தில் இருந்து வருவோரை தனிமைப்படுத்த வேண்டும் - கலெக்டர் உத்தரவு
பரமக்குடி அருகேயுள்ள பார்த்திபனூர்-மரிச்சுக்கட்டி சோதனைச்சாவடியில் வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் மருத்துவக்குழுவினரின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே மாவட்டத்தில் இதுவரை 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 11 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.
இந்த நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து அரசு அதிகாரிகளின் அனுமதி பெற்று வாகனங்களில் வருபவர்கள் பார்த்திபனூர் சோதனைச்சாவடியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களை வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார். இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து அனுமதி பெற்று வாகனங்களில் வரும் பலரும் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களிலிருந்து சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, வாணி வழியாக ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வந்துள்ளவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் போலீசார் உதவியுடன் சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். மேலும் அனுமதி பெறாமல் வருபவர்களை போலீசார் மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தி அவர்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
எனவே வெளிமாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் வருபவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் அனுமதியுடன் முறையாக வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு வருபவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்தவர்கள் தாமாக தகவல் தெரிவிக்க வேண்டும்: கலெக்டர் ராமன் வேண்டுகோள்
சேலம் மாவட்டத்தில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்தவர்கள் தாமாக முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சென்று வந்திருந்தாலோ, அங்கு பணிபுரிந்து திரும்பிவந்திருந்தாலோ அவர்கள் தாமாக முன்வந்து அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சேலம் மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகள் இவற்றில் ஒன்றுக்கு நேரில் வந்து தங்களது விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
மேலும், இதுகுறித்த விவரங்களை சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கோவிட்-19 கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களான 0427-2450498, 2450022, 2450023, 73058 68942 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சென்று வந்தவர்கள் குறித்து தகவல் தெரிவிக்காமல் இருந்தால் அவர்கள் மீது காவல் துறையின் மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் no-n-r-es-i-d-e-ntt-a-m-il.org என்ற இணைய முகப்பில் உள்ள “ Retu-rn to tam-il nadu ” என்ற இணைய படிவம் மூலம் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அனுமதி பெற்று வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருகை தரும் நபர்கள் 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள்.
மத்திய அரசால் நோய்தொற்றின் அளவு மற்றும் தன்மை அடிப்படையில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என வகைப்பாடு செய்யப்பட்டு அந்த பகுதிகளில் உள்ள நோய் தடுப்பு பகுதிகளை தவிர மற்றபகுதிகளில் தொழிற்சாலைகள் இயங்குவதற்கும், திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் வாகன அனுமதி சீட்டு பெற தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ள tne-pass.tne-ga.org என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இ-பாஸ் வேண்டி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
தேனி, பெரியகுளம், போடி உள்பட 6 நகரங்களுக்கு எந்த தளர்வும் கிடையாது கலெக்டர் அறிவிப்பு
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கான வழிகாட்டுதல் நடைமுறை படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், ஊரடங்கு உத்தரவு தளர்வு அளிப்பது குறித்து கூறியதாவது:-
தேனி மாவட்டத்தில் கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளான தேனி-அல்லிநகரம், பெரியகுளம், போடி, சின்னமனூர் கம்பம் ஆகிய நகராட்சி பகுதிகள் மற்றும் உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் எந்த ஒரு தளர்வுகளும் இல்லை. இந்த 6 நகர்பகுதிகளிலும் தற்போதைய நடைமுறையே தொடரும். அனுமதியளிக்கப்பட்ட எல்லா பணிகளையும் நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் தொடர்ந்து செயல்படுத்தலாம்.
கடைகள் திறக்கும் நேரம்
இன்று (திங்கட்கிழமை) முதல் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் அரசு கட்டுமான பணிகள், ஏற்றுமதி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். அச்சகங்கள், கட்டுமானப்பொருட்கள் விற்பனையகங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், செல்போன், கணினி, மின்சாதனப் பொருட்கள், மின் மோட்டார், கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம். உணவகங்கள் பார்சல் மட்டுமே வழங்கும் வகையில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம்.
வீட்டு வேலை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கான சிறப்பு உதவியாளர்கள் மற்றும் சுய திறன் பணியாளர்களான பிளம்பர், எலக்ட்ரீசியன், தச்சர் உள்ளிட்டவர்கள் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளலாம்.
தொழிற்சாலைகள்
நகராட்சி பகுதிகளில் கட்டுமான பணிகளை பொறுத்தவரை பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் அல்லது பணியாளர்களை ஒரு முறை மட்டும் வேறு இடத்தில் இருந்து அழைத்து வர அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ளலாம். பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் இதற்கு அனுமதி பெற தேவையில்லை.
தொழிற்சாலைகளை பொறுத்தவரை நகராட்சி பகுதிகளுக்கு அனுமதி இல்லை. பேரூராட்சி பகுதிகளில் ஜவுளித்துறை நிறுவனங்கள் மட்டும் மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்று செயல்படலாம், ஊராட்சி பகுதிகளில் அனுமதி பெற தேவையில்லை. நூற்பு ஆலைகள் செயல்பட நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அனுமதி இல்லை. ஊராட்சி பகுதிகளில் இயங்கலாம்.
பெருந்தொழிற்சாலைகள் கட்டுமான பணிகளுக்கும், பணிகளை தொடங்கவும், பணியாளர்கள் மற்றும் வாகனங்களுக்கு மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். இதற்கான பணியாளர்களுக்கான வாகனங்களில் 50 சதவீத அளவுக்கு மட்டுமே பணியாளர்களை அழைத்து வர அனுமதி வழங்கப்படும். மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 33 சதவீத பணியாளர்களைக் கொண்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
Post a Comment
0 Comments