Type Here to Get Search Results !

சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 6 போலீசாருக்கு கொரோனா; விழுப்புரத்தில் இன்று புதிதாக 20 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட மேலும் 6 போலீசாருக்கு கொரோனா
சென்னை போலீசில் தினந்தோறும் கொரோனாவால் போலீசார் பாதித்த வண்ணம் உள்ளனர். ஏற்கனவே 18 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்பட 6 போலீசார் பாதிக்கப்பட்டு, மொத்த எண்ணிக்கை 24 ஆக உயர்ந்தது.

சேத்துப்பட்டு, கொத்தவால் சாவடி போக்குவரத்து போலீஸ்காரர்கள் 2 பேர், ஐ.சி.எப். போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், திருமங்கலம் உளவுப்பிரிவு போலீஸ்காரர், சூளைமேடு ரோந்து போலீஸ்காரர் ஆகியோர் கொரோனாவால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் குடும்பத்தினரும், சார்ந்தவர்களும் பரிசோதனை செய்யப்பட்டனர்.

நடிகர் சங்க தலைவர் தேர்தல் தொடர்பான வழக்கு கோர்ட்டு விசாரணையில் உள்ளது. இதனால் நடிகர் சங்க தேர்தல் ஓட்டுப்பெட்டிகள் சென்னை நுங்கம்பாக்கம் ஹாடாஸ் சாலையில் உள்ள வங்கி ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அந்த ஓட்டு பெட்டிகளை பாதுகாக்கும் காவல் பணியில் இருந்த போலீஸ்காரர் நேற்று முன்தினம் இரவு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரும் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

கோயம்பேடு சந்தை மூலம் விழுப்புரத்தில் இன்று புதிதாக 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கோயம்பேடு சந்தை மூலம் விழுப்புரத்தில் இன்று புதிதாக 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயம்பேட்டில் இருந்து காய்கறி வாங்கிவந்து விழுப்புரத்தில் விற்பனை செய்த 20 பேருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் 500 பேரின் முடிவு வர வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad