Type Here to Get Search Results !

கடலூரில் இன்று புதிதாக 68 பேருக்கு கொரோனா: கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களால் தொற்று அதிகரிப்பு

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
கடலூரில் இன்று புதிதாக 68 பேருக்கு கொரோனா: கோயம்பேட்டில் இருந்து வந்தவர்களால் தொற்று அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா நோய்க் கிருமி பரவுவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. நோய்த்தொற்று பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு 903 பேர் வந்தனர். இதில் 699 பேர் சுகாதாரத்துறையினரால் அடையாளம் காணப்பட்டு, அவர்களை தொழுதூரில் உள்ள தனியார் கல்லூரி, விருத்தாசலம் அரசு கல்லூரி மற்றும் மாணவர் விடுதி, வேப்பூரில் உள்ள தனியார் பள்ளி உள்பட 9 இடங்களில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

நேற்று வரை கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் 161 பேர் பாதிக்கப்பட்டனர்.

68 பேருக்கு உறுதி

இதற்கிடையில் இன்று காலை மீண்டும் பரிசோதனை முடிவுகள் வரப்பெற்றது. இதில் ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர்கள் அனைவரும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்கள் என்பது தெரிந்தது.

இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்தது. இவர்கள் அனைவரும் விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி ஆகிய தாலுகா பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த கிராமங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அந்த கிராம மக்கள் வெளியே செல்லாத வகையிலும், வெளிநபர்கள் அந்த கிராமங்களுக்குள் நுழையாமல் இருப்பதற்காகவும் பிரதான சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

இது தவிர கடலூர் அரசு மருத்துவமனையில் 45 பேர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 10 பேர், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் 3 பேர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 பேர் என 89 பேர் கொரோனா அறிகுறிகளுடன் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 229 ஆனது. இவர்களில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 203 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்து 931 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில் 229 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 4 ஆயிரத்து 341 பேருக்கு பாதிப்பு இல்லை. 430 பேருக்கு முடிவுகள் வரவில்லை. இதற்கிடையில் நேற்று கொரோனா உறுதியான 107 பேரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், ஒருவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்றார். கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களில் 129 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பலருக்கு பரிசோதனை முடிவு வராததால், தொற்று பாதிப்போரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad