Type Here to Get Search Results !

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,000-ஐ தாண்டியது


தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,000-ஐ தாண்டியது
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன.  எனினும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தெரிவித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,000-ஐ தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால்  இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,952 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3561 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 89 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.  கொரோனாவால் இதுவரை 1783 பேர் உயிரிழந்த நிலையில், 15,267 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் கொரோனா பாதிப்புக்கு, பலி எண்ணிக்கை 1,694 ஆக நேற்று உயர்வடைந்து இருந்தது.  14 ஆயிரத்து 183 பேர் குணமடைந்தும், 33,514 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 49 ஆயிரத்து 391 ஆக உயர்வடைந்து இருந்தது.

இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு 89 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 1,694ல் இருந்து 1,783 ஆக உயர்வடைந்து உள்ளது.  15 ஆயிரத்து 266 பேர் குணமடைந்தும், 35,902 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 49 ஆயிரத்து 391ல் இருந்து 52 ஆயிரத்து 952 ஆக உயர்வடைந்து உள்ளது.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 16,758 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 651 பேர்  உயிரிழந்துள்ள நிலையில், 3094 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 6625 பேருக்கு தொற்று  பாதிப்புடன்  குஜராத் மாநிலம் 2ம் இடத்தில் உள்ளது. அங்கு, 396 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1500 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. கடந்த வாரம் வரை 6-வது இடத்தில் இருந்த தமிழகம் இந்த வாரம்  முதல் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தில் 4829 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1516 பேர் குணமடைந்துள்ளனர்.

மாநில வாரியாக விவரம்:
அசாமில் 45 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 32 பேர் குணமடைந்தது.
பிகாரில் 542 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 188 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 120 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 21 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 59 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 36 பேர் குணமடைந்தது.

கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 5532 பேருக்கு பாதிப்பு; 65 பேர் பலி; 1542 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 594 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 260 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 43 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 503 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 469 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 3317 பேருக்கு பாதிப்பு; 92 பேர் பலி; 1596 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 127 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 37 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 41 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 17 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 12 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 10 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 185 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 61 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 9 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 6 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 0 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 1516 பேருக்கு பாதிப்பு; 27 பேர் பலி; 135 பேர் குணமடைந்தது.
உத்தரகண்ட்டில் 61 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 39 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 693 பேருக்கு பாதிப்பு; 29 பேர் பலி; 354 பேர் குணமடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் 775 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 322 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1107 பேருக்கு பாதிப்பு; 29 பேர் பலி; 628 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 1456 பேருக்கு பாதிப்பு; 144 பேர் பலி; 364 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 1777 பேருக்கு பாதிப்பு; 36 பேர் பலி; 729 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 3138 பேருக்கு பாதிப்பு; 185 பேர் பலி; 1099 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 2998 பேருக்கு பாதிப்பு; 60 பேர் பலி; 1130 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 45 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 38 பேர் குணமடைந்தது.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 32 பேர் குணமடைந்தது.
தாதர் நகர் ஹவேலியில் 1 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad