Type Here to Get Search Results !

தொழில் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு தளருமா? முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்; அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க முக.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்
உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிரான போர் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் நேற்று முன்தினம் 138 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவே அதிக பாதிப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் இதையும் மிஞ்சும் வகையில் நேற்று 176 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,082 ஆக அதிகரித்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மே 3ம் தேதி (நாளை) வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக, அனைத்து தொழில்களும் முடங்கின. ஊரடங்கை தமிழகத்தில் படிப்படியாக தளர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். மே 3ம் தேதிக்கு (நாளை) பிறகு தமிழகத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகளை வகுக்க, தமிழக நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் 17 பேர் கொண்ட வல்லுநர் குழுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஏப்ரல் 2வது வாரம் அறிவித்தார்.

இந்த குழு, சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்கள் மற்றும் அமைப்புகளிடம் கலந்தாலோசித்து, தனது இடைக்கால அறிக்கையை நேற்று முதல்வரிடம் சமர்ப்பித்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. இதில், மேலும் 2 வாரம் ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்து அறிவித்தது குறித்து முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்தி வருகிறார். சிவப்பு மண்டலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இது குறித்தும் ஆலோசனை செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே தேசிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்தநிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி உள்ளது.

இந்த ஆலோசனையில்,  தேசிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடா்பாக ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று குறைந்த கிராமப்புற பகுதிகளில் கூடுதல் தளர்வு அளிப்பது குறித்து ஆலோசன நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. எந்தெந்த பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகை என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு மாநிலத்தில் செயல்படுத்தப்பட உள்ள சில முக்கிய பணிகள் குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தமிழகத்தில் எந்தெந்த பணிகளுக்கு மாநில அரசு அனுமதி அளிக்கும் என்பது குறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு குறித்த மத்திய அரசின் வழிகாட்டுதலில் முக்கியமான முடிவை அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான  வழிமுறைகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஊரடங்கால் பாதிக்கப்படும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க முக.ஸ்டாலின் வலியுறுத்தல்
ஊரடங்கால் பாதிக்கப்படும் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க திமுக தலைவர் முக.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள் இருப்பது மக்களின் கடமை என்றும், பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad