Type Here to Get Search Results !

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 46,433-ஆக உயர்வு;


தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 46,433-ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,000-ஐ தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா   வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர்    எண்ணிக்கை 46,433 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3900 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 195 பேர்   உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 1568 பேர் உயிரிழந்த நிலையில், 12,727   பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 14,541 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 583 பேர்    உயிரிழந்துள்ள நிலையில், 2465 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 5804 பேருக்கு தொற்று பாதிப்புடன் குஜராத் மாநிலம் 2ம்   இடத்தில் உள்ளது. அங்கு, 319 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1195 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 4-வது இடத்தில்   உள்ளது. நேற்று முன்தினம் வரை 6-வது இடத்தில் இருந்த தமிழகம் இன்று 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தில் 3550   பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1409 பேர் குணமடைந்துள்ளனர்.

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 43 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 32 பேர் குணமடைந்தது.
பிகாரில் 528 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 130 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 102 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 21 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 58 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 36 பேர் குணமடைந்தது.

கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 4898 பேருக்கு பாதிப்பு; 64 பேர் பலி; 1431 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 517 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 254 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 29 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 500 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 462 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 3061 பேருக்கு பாதிப்பு; 77 பேர் பலி; 1394 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 115 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 27 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 41 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 17 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 12 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 169 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 60 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 8 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 5 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 0 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 1233 பேருக்கு பாதிப்பு; 23 பேர் பலி; 121 பேர் குணமடைந்தது.
உத்தரகண்ட்டில் 60 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 39 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 651 பேருக்கு பாதிப்பு; 27 பேர் பலி; 321 பேர் குணமடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் 726 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 303 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1085 பேருக்கு பாதிப்பு; 29 பேர் பலி; 585 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 1259 பேருக்கு பாதிப்பு; 133 பேர் பலி; 218 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 1650 பேருக்கு பாதிப்பு; 36 பேர் பலி; 524 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 2942 பேருக்கு பாதிப்பு; 165 பேர் பலி; 798 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 2766 பேருக்கு பாதிப்பு; 50 பேர் பலி; 802 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 41 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 34 பேர் குணமடைந்தது.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 32 பேர் குணமடைந்தது.

இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 1,568 ஆக உயர்வு
நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை நேற்று 1,373 ஆக உயர்வடைந்து இருந்தது.  11 ஆயிரத்து 706 பேர் குணமடைந்தும், 29,453 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 42 ஆயிரத்து 533 ஆக உயர்வடைந்தது.

இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு 195 பேர் பலியான நிலையில், பலி எண்ணிக்கை 1,373ல் இருந்து 1,568 ஆக உயர்வடைந்து உள்ளது.  12 ஆயிரத்து 727 பேர் குணமடைந்தும், 32,134 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 42 ஆயிரத்து 533ல் இருந்து 46 ஆயிரத்து 433 ஆக உயர்வடைந்து உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad