Type Here to Get Search Results !

உலக நாடுகள் நிலவரம்: பாதிப்பு 36.42 லட்சத்தை தாண்டியது; கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு 60 ஆயிரம் கோடி நிதி

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
உலக நாடுகள் நிலவரம்: பாதிப்பு 36.42 லட்சத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2.52 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 252,214 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 3,642,508 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,194,246 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 49,634   பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,836 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1,389 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 11,762 பேர் குணமடைந்தனர். 

* தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,409 ஆக அதிகரித்துள்ளது.

* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 69,915 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,212,785 ஆக அதிகரித்துள்ளது.

* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 29,079 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 211,938 ஆக உயர்ந்துள்ளது.

* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 25,428 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 248,301 ஆக அதிகரித்துள்ளது.

* பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 25,201 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 169,462 ஆக அதிகரித்துள்ளது.

* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 28,734 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 190,584 ஆக உயர்ந்துள்ளது.

* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,277 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,647 ஆக அதிகரித்துள்ளது.

* பெல்ஜியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 7,924 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,267 ஆக அதிகரித்துள்ளது.

* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,993 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166,152 ஆக அதிகரித்துள்ளது.

* நெதர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,082 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,770 ஆக அதிகரித்துள்ளது.

* சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,633 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,880 ஆக அதிகரித்துள்ளது.

* துருக்கியில் 3,461 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,784 பேரும், பிரேசில் நாட்டில் 7,328 பேரும், சுவீடன் நாட்டில் 2,769 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

* கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,854 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் 1,319 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,154 ஆக அதிகரித்துள்ளது.

* போர்ச்சுகல் நாட்டில் கொரோனாவுக்கு 1,063 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.


கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு 60 ஆயிரம் கோடி நிதி அளிக்க உலக தலைவர்கள் உறுதி; அமெரிக்கா மறுப்பு
உலகத் தலைவர்களும் அமைப்புகளும் கொரோனா தொற்றுக்கான  தடுப்பூசி மற்றும் சிகிச்சைகள் குறித்து ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் விநியோகிக்க 8 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 60368 கோடி ரூபாய்)  நிதி அளிக்க உறுதியளித்துள்ளனர், ஆனால் அமெரிக்கா உலகளாவிய முயற்சிக்கு பங்களிக்க மறுத்துவிட்டது.

இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளான பிரிட்டன், நார்வே மற்றும் சவுதி அரேபியா ஆகியவற்றை உள்ளடக்கியது. காணொலி உரையாடலில்  ஜப்பான், கனடா, தென்னாப்பிரிக்கா மற்றும் 10க்கும் மேற்பட்ட  நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதே நேரத்தில் வைரஸ் தோன்றியதாக நம்பப்படும் சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை  அதன் தூதரால் மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யப்பட்டது.

கொரோனாவுக்கு எதிரான உலக வங்கி, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மற்றும் பணக்கார தனிநபர்களின் முயற்சிகளைக் ஊக்குவிக்கவும் உலகெங்கிலும் உள்ள மோசமான மற்றும் இடையூறான ஆரம்ப நடவடிக்கையை  மேற்கொள்ளவும் அரசாங்கங்கள் பல வாரங்கள் அல்லது மாதங்கள் தொடர்ந்து நிதி திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய  ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன்

இது முன்னோடியில்லாத வகையில் உலகளாவிய ஒத்துழைப்பைத் தொடங்க உதவும். கொரோனாவுக்கு எதிராக சில மணிநேர இடைவெளியில் தடுப்பூசி, நோயறிதல் மற்றும் சிகிச்சைக்காக இந்திய மதிப்பில் 60368 கோடி ரூபாய் 7.4 பில்லியன் யூரோக்கள் ( 8.1 பில்லியன் டாலர் ) நிதிக்கு கூட்டாக உறுதியளித்துள்ளோம் என்று அவர் கூறினார்.

நன்கொடையாளர்களில் 1 மில்லியன் யூரோக்களை நிதியளிக்கும் பாப் பாடகர் மடோனாவும் அடங்குவதாக வான் டெர் லேயன் கூறினார்.

உலகின் மிகவும் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்புகளைக் கொண்ட அமெரிக்கா இதில் பங்கேற்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் அமெரிக்கா ஏன் பங்கேற்கவில்லை என்று குறிப்பாகக் கூற மறுத்துவிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த  முயற்சியை நாங்கள் ஆதரிக்கிறோம். இது பல  முயற்சிகளில் ஒன்றாகும், இதில்  அமெரிக்கா முன்னணியில் உள்ளது" என்று அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும் போது எந்தவொரு தடுப்பூசியும் பணக்கார நாடுகளுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என கூறினார்

நிச்சயமாக இதைக் கண்டுபிடிப்பவர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்படும், ஆனால் நாங்கள் தேர்ந்தெடுக்கும் அமைப்பால் உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு அணுகல் வழங்கப்படும்" என்று பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கூறினார்.

இங்கிலாந்தில் கொரோனா பலி எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்தது
வளரும் நாடுகள் மட்டுமின்றி வல்லரசு நாடுகளையும் கதிகலங்க வைத்து வரும் கொரோனா வைரஸ் உலக அளவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்த ஆட்கொல்லிக்கு எதிராக தடுப்பூசியோ, தடுப்பு மருந்துகளோ இதுவரை கண்டு பிடிக்கப்படாததால், கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலக அளவில் அமெரிக்காவை மிகவும் பாதித்துள்ள இந்த வைரஸ் மற்றொரு வல்லரசு நாடான இங்கிலாந்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் முதல் அனைத்து தரப்பினரையும் பாகுபாடு பார்க்காமல் தாக்கி வருகிறது. இதில் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கணிசமாக ஏற்படுகிறது.

மேலும் 315 பேர் சாவு

அங்கு மேலும் 315 பேர் கொரோனாவுக்கு மடிந்துள்ளதை தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 28 ஆயிரத்து 734 ஆக அதிகரித்து உள்ளது. இது நாடு முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகள், பராமரிப்பு இல்லங்களில் ஏற்பட்ட சாவுகள் மற்றும் பரவலாக நிகழ்ந்துள்ள மரணங்களின் எண்ணிக்கையை உள்ளடக்கியது ஆகும்.

இதைப்போல வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கையும் 1 லட்சத்து 86 ஆயிரத்தை கடந்து விட்டது. நேற்று முன்தினம் காலை வரை 76 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வைரஸ் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதைப்போல வைரசுக்கு எதிரான போரில் முன்னணியில் இருக்கும் மருத்துவ, தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கும் இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளதாக கேபினட் அலுவலக மந்திரி மைக்கேல் கோவ் கூறினார்.

நாட்டின் பொருளாதார மேம்பாடு, குழந்தைகளை பள்ளிகளுக்கு திரும்ப செய்வது, பயணம் மற்றும் பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்வது உள்ளிட்ட விரிவான நடவடிக்கைகளை எப்படி தொடங்குவது? என்பது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.

36 லட்சத்தை கடந்தது

இதற்கிடையே உலக அளவில் கொரோனா வைரசின் பிடியில் சிக்கியோரின் எண்ணிக்கை 36 லட்சத்தை கடந்து விட்டது. இதைப்போல சாவு எண்ணிக்கையும் 2 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்து உள்ளது. இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாதிப்பிலும் 11 லட்சத்து 99 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அமெரிக்கர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad