Type Here to Get Search Results !

சீனாவுக்கு வூஹான் போல் தமிழகத்துக்கு சென்னை? இன்று முதன் முறையாக ஒரே நாளில் 200-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு என தகவல்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
தமிழகத்து வூஹான் சென்னைக்கு இன்று முதன் முறையாக ஒரே நாளில் 200-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு என தகவல்
தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,341 குணமாகி வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 4 நாட்களகா சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னையில் ஒவ்வொரு நாளும் 100க்கும் மேற்ப்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பலருக்கு தொற்று பரவியிருக்க கூடும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை முதன் முறையாக 200-ஐ தாண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
முழு ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பு காய்கறிகளை வாங்க வேண்டும் என்று கோயம்பேடு மட்டுமல்லாமல் மற்ற காய்கறி சந்தையிலும் மக்கள் குவிந்தனர். அதன் விளைவாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது என கூறப்படுகிறது. அதன் தாக்கத்தை சுகாதாரத்துறை வெளியிடும் பாதிப்பு விவரத்தில் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை பார்க்க முடிகிறது.

கடந்த 10 நாட்களில் மட்டும் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த 10 நாட்களில் அதிக பாதிப்பு வர கோயம்பேடு சந்தை முக்கிய காரணம் என கூறப்படுகிறது. மாவட்ட வாரியாக கூறுகையில் கடந்த 10 நாட்களில் 800-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad