Type Here to Get Search Results !

மனைவி பலாத்காரம் செய்யப்பட்டது கூட தெரியாமல் குறட்டை விட்டு தூங்கிய காவலாளி - பால் சப்ளை பாய் கைது

சென்னை அண்ணா நகரில் காவலாளியாக நேபாளி ஒருவர் அங்கு உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில்  பணி செய்து கொண்டு வருகிறார். அவர் அதே அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவியுடன் மொட்டை மாடியில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

full-width இந்த நிலையில் சம்பவத்தன்று அடுக்குமாடி குடியிருப்பின் முன்பகுதியில் காவலாளி குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த நிலையில் உள்ளே புகுந்த மர்ம ஆசாமி ஒருவர் ஒவ்வொரு குடியிருப்பாக நோட்டமிட்டு கடைசியாக அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் உள்ள காவலாளி வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார்.
திடீரென வீட்டுக்குள் புகுந்த அந்த மர்ம நபர், வீட்டில் தனியாக இருந்த காவலாளியின் மனைவி கதவை திறந்ததும் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து வாசலில் தூங்கிக்கொண்டிருந்த கணவனை எழுப்பி கண்ணீர் மல்க விவரித்துள்ளார் அந்தப் பெண்.

அண்ணாநகர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக காவலாளியும் அவரது மனைவியும் புகார் அளித்தனர். காவல்துறையினர் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அக்கம் பக்கத்து வீடுகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் காவலாளியின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்தது பச்சை கலர் டீசர்ட் அணிந்து ஆசாமி என்பதும், அந்த ஆசாமி உள்ளாடையுடன் அங்கு சென்று சென்று கொண்டிருந்ததும் சிசிடிவி கேமரா வீடியோக்களில் இருந்து தெரிய வந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad